லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

முதல்வர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார்! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

தமிழ்நாடு முதல்வரின் கருப்புக் கொடிப் போராட்டம் பற்றி கிரண் ரிஜிஜு கருத்து...

News image

முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு - ANI

Updated On :16 ஏப்ரல் 2026, 5:26 am

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வியாழக்கிழமை தெரிவித்தார்.

நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்சியாக, வியாழக்கிழமை (ஏப்.16) முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு அமா்வு நடைபெறவுள்ளது.

மக்களவை-பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமலாக்கவும், அதற்கு ஏதுவாக மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850 வரை அதிகரிக்கவும் வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்களை அறிமுகம் செய்து, விவாதித்து நிறைவேற்றும் நோக்கில் இந்த அமா்வு நடைபெறுகிறது.

இந்த நிலையில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை எதிர்த்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கருப்புக் கொடியேற்றி, மசோதாவின் நகலை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்ததாவது:

”தமிழ்நாடு முதல்வர் அரசியல் செய்கிறார். இங்குள்ள சிலரால் அவர் தவறாக வழிநடத்தப்படுகிறார். மகளிர் இடஒதுக்கீட்டுக்கு எதிராக யாரும் இல்லை. ஆனால், அதனை நிறைவேற்றவிடாமல் தடுக்க காரணத்தை தேட முயல்கிறார்கள். இது தவறான ஒன்றாகும்.

ஏதேனும் காரணத்தைக் காட்டி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவிடாமல் தோற்கடித்த நினைத்தால், அது துரதிர்ஷ்டவசமான ஒரு தருணமாக அமையும்.

தமிழ்நாடோ அல்லது வேறு எந்த மாநிலமோ மசோதாக்கள் குறித்துக் கவலைகொள்ளத் தேவையில்லை. அவர்கள் மக்களைத் தவறாக வழிநடத்தவோ, திசைதிருப்பவோ கூடாது. இதுவே எனது வேண்டுகோள். அனைவருக்கும் நியாயமான வாய்ப்பும், பிரதிநிதித்துவமும் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், எதிர்க்கட்சிகளின் ஆதரவளித்தால் மட்டுமே மசோதா நிறைவேறும்.

Summary

M.K. Stalin is being misled! — Union Minister Kiren Rijiju

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.