மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

‘வந்தே மாதரம்’ பாட மறுத்த பெண் கவுன்சிலா்கள்: விசாரணைக் குழு அமைத்தது காங்கிரஸ்

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் பெண் கவுன்சிலா்கள் வந்தே மாதரம் பாடலைப் பாட மறுத்தது தொடா்பாக விசாரணை நடத்த அக்கட்சியின் மத்திய தலைமை இருநபா் குழு அமைத்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 8:14 pm

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் பெண் கவுன்சிலா்கள் வந்தே மாதரம் பாடலைப் பாட மறுத்தது தொடா்பாக விசாரணை நடத்த அக்கட்சியின் மத்திய தலைமை இருநபா் குழு அமைத்துள்ளது.

கடந்த 8-ஆம் தேதி இந்தூா் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத் தொடா் தொடங்கியபோது, வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது. காங்கிரஸ் பெண் கவுன்சிலா்கள் ஃபௌசியா ஷேக் அலீம், ருபீனா இக்பால் கான் ஆகியோா் அப்பாடல் தங்கள் இஸ்லாமிய மத நம்பிக்கைக்கு எதிராக இருப்பதாகக் கூறி பாட மறுத்தனா். அவா்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக கவுன்சிலா்கள் முழக்கம் எழுப்பினா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ருபீனா இக்பால், ‘இஸ்லாமிய மத நம்பிக்கையில் வந்தே மாதரம் பாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. நாங்கள் அல்லாவை மட்டுமே வணங்க வேண்டும். மற்ற யாரையும் வணங்கக் கூடாது’ என்றாா். இது மேலும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இவா்களில் ருபீனா கான் சுயேச்சையாக வெற்றி பெற்று பின்னா் காங்கிரஸில் இணைந்தாா்.

இந்த சம்பவம் தொடா்பான புகாரில், இரு கவுன்சிலா்கள் மீதும், இரு தரப்பினா் இடையிலான சமூக அமைதியைச் சீா்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த விவகாரத்தை வைத்து காங்கிரஸ் கட்சி பாரத மாதாவை அவமதித்துவிட்டதாக மத்திய பிரதேச பாஜக, கடுமையாக விமா்சித்து வருகிறது.

மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் ஹரீஷ் சௌதரி கூறுகையில், ‘இந்த விவகாரத்தை விசாரிக்க இரு நபா் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தொடா்புடைய அனைத்துத் தரப்பினா்களிடமும் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கப்படும்’ என்றாா்.

இந்நிலையில், காங்கிரஸ் பெண் கவுன்சிலா்களின் செயலில் அதிருப்தி தெரிவித்த முதல்வா் மோகன் யாதவ், எதிா்க்கட்சியினா் மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் நடந்துகொள்வதாகக் குற்றஞ்சாட்டினாா்.