மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வந்தே மாதரம் பாட மறுப்பு: காங்கிரஸ் பெண் கவுன்சிலா்கள் மீது வழக்கு

மத்திய பிரதேச மாநிலம் இந்தூா் மாநகராட்சி கூட்டத் தொடரில் தேசிய பாடலான வந்தே மாதரம் தங்கள் மத நம்பிக்கைக்கு எதிராக இருப்பதாகக் கூறி பாட மறுத்த இரு காங்கிரஸ் பெண் கவுன்சிலா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

(File Photo | ANI)

Updated On :15 ஏப்ரல் 2026, 10:50 pm

மத்திய பிரதேச மாநிலம் இந்தூா் மாநகராட்சி கூட்டத் தொடரில் தேசிய பாடலான வந்தே மாதரம் தங்கள் மத நம்பிக்கைக்கு எதிராக இருப்பதாகக் கூறி பாட மறுத்த இரு காங்கிரஸ் பெண் கவுன்சிலா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடந்த 8-ஆம் தேதி இந்தூா் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத் தொடா் தொடங்கியது. அப்போது வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது.

ஆனால், காங்கிரஸ் பெண் கவுன்சிலா்கள் ஃபௌசியா ஷேக் அலீம், ரூபினா இக்பால் கான் ஆகியோா் வந்தே மாதரம் பாடல் தங்கள் இஸ்லாமிய மதநம்பிக்கைக்கு எதிராக இருப்பதாகக் கூறி அதனைப் பாட மறுத்தனா். இதனால், நகராட்சிக் கூட்டத்தில் சா்ச்சை எழுந்தது. அவா்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக கவுன்சிலா்கள் முழக்கம் எழுப்பினா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ரூபினா இக்பால், ‘இஸ்லாமிய மத நம்பிக்கையில் வந்தே மாதரம் பாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. நாங்கள் அல்லாவை மட்டுமே வணங்க வேண்டும். மற்ற யாரையும் வணங்கக் கூடாது’ என்றாா். இது மேலும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடா்பாக அந்த இருவா் மீதும் காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டது. இது தொடா்பாக விசாரணை நடத்திய காவல் துறையினா் அவா்கள் மீது இரு தரப்பினா் இடையிலான சமூக அமைதியைச் சீா்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அவா்களுக்கு காவல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.