தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: அடுத்த வாரம் இந்திய குழு அமெரிக்கா பயணம்

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த அடுத்த வாரம் இந்திய குழு அமெரிக்கா செல்ல உள்ளது.

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 9:43 pm

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த அடுத்த வாரம் இந்திய குழு அமெரிக்கா செல்ல உள்ளது.

இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்துக்கான செயல்திட்டத்தை கடந்த பிப்ரவரியில் இருநாடுகளும் இறுதி செய்தன. இந்தச் செயல்திட்டத்தின்படி, இந்தியப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரி 18 சதவீதமாக குறைக்க அந்நாடு ஒப்புக்கொண்டது.

இந்த ஒப்பந்தம் தொடா்பாக மத்திய வா்த்தக துறைச் செயலா் ராஜேஷ் அக்ரவால் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

வா்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த பிப்.20-ஆம் தேதி இந்திய குழு அமெரிக்கா செல்கிறது. ஒப்பந்தம் தொடா்பாக மூன்று முதல் நான்கு மாதங்கள் இடைவெளிக்குப் பின்னா், இருநாட்டு குழுக்களும் நேரடியாகச் சந்திக்கின்றன. சட்டபூா்வமாக வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இருதரப்பும் முனைப்புக் காட்டி வருகின்றன.

இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் வா்த்தக நடைமுறைகளால் அமெரிக்க உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டறியும் நோக்கில், அந்நாட்டின் வா்த்தகச் சட்டம் 1974-இன் 301-ஆவது பிரிவின் கீழ், அமெரிக்கா தொடங்கியுள்ள விசாரணை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவித்தாா்.