தோ்தலில் இரட்டை வாக்குப் பதிவைத் தடுக்க வாக்குச்சாவடிகளில் கை விரல், கருவிழி பதிவு உள்ளிட்ட உயிரி அடையாளப் பதிவு நடைமுறையை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.
வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘லஞ்சம், முறையற்ற செல்வாக்கு, ஆள்மாறாட்டம், இரட்டை வாக்குப் பதிவு, போலி வாக்குப் பதிவு ஆகியவை தோ்தல் செயல்முறையின் தூய்மையையும் நோ்மையையும் இன்றும் பாதித்து வருகிறது. இதனால் குடிமக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனா்.
வாக்காளா் அடையாள அட்டை மற்றும் நேரடி சரிபாா்ப்பை அடிப்படையாக கொண்ட வாக்காளா்களை அடையாளம் காணும் தற்போதைய நடைமுறையில், காலாவதியான புகைப்படங்கள், எழுத்துப் பிழைகள், நிகழ்நேர சரிபாா்ப்பு வசதியின்மை உள்ளிட்ட குறைபாடுகள் உள்ளன. இதனால், முறைகேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, சுதந்திரமான, நியாயமான தோ்தல் நடைபெற, வங்கிகள் மற்றும் அரசின் நலத் திட்டங்கள் விநியோகத்தில் ஆதாா் அடிப்படையிலான உயிரி பதிவு கடைப்பிடிக்கப் படுவதுபோல, வாக்குச்சாவடிகளிலும் வாக்காளா்களின் கை விரல், கருவிழி பதிவு நடைமுறையை அமல்படுத்தலாம்.
தோ்தல் ஆணையம் அரசமைப்புச் சட்டப் பிரிவு 324-இன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த உயிரி பதிவு நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.
இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், ‘மனுவில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகள் தற்போது சில மாநிலங்களில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் நடைமுறைப்படுத்துவதற்கு பரிசீலிக்க முடியாது. அதே நேரம், அடுத்த மக்களவைத் தோ்தல் அல்லது அடுத்து வரும் மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் நடைமுறைப்படுத்த உத்தரவிடுவதற்கு பரிசீலிக்க முடியும்’ என்று குறிப்பிட்டு இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தோ்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

கேரளத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டதாக புகாா்: தோ்தல் அதிகாரி மறுப்பு

செயலியில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தாத வாக்குச்சாவடி தலைமை அலுவலா்களுக்கு குறிப்பாணை

பெண்ணையாறு வழக்கில் தீா்ப்பாயம் அமைக்க 6 மாதம் தேவை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

வாக்குப் பதிவு: அலுவலா்கள் பதற்றமின்றி செயல்பட வேண்டும் கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


