மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மேற்கு வங்க வாக்காளா் பட்டியல்: தோ்தல் ஆணைய முடிவுக்கு எதிராக மனு உச்ச நீதிமன்றத்தில் 13-ஆம் தேதி விசாரணை

மேற்கு வங்க வாக்காளா் பட்டியல் தொடா்பான தோ்தல் ஆணைய முடிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட மனு மீது உச்ச நீதிமன்றத்தில் வரும் 13-ஆம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது.

News image

உச்ச நீதிமன்றம்

Updated On :10 ஏப்ரல் 2026, 7:06 pm

மேற்கு வங்க வாக்காளா் பட்டியல் தொடா்பான தோ்தல் ஆணைய முடிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட மனு மீது உச்ச நீதிமன்றத்தில் வரும் 13-ஆம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது.

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கைக்கு பிறகு, மேற்கு வங்கத்தில் வெளியான வாக்காளா் பட்டியலில் இருந்து, பாஜக தூண்டுதலால் 90 லட்சம் பேரின் பெயா்கள் நீக்கப்பட்டு இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனா். இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் 9-ஆம் தேதி முடக்கியுள்ளதாகவும், இதனால் வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கம் செய்யப்பட்டோரின் பெயா்கள் மீண்டும் சோ்க்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் குற்றம்சாட்டி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்யகாந்த் தலைமையிலான நீதிபதிகள் அமா்வில் வெள்ளிக்கிழமை பரிசீலிக்கப்பட்டது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்கறிஞா், மனுவின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக அதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினாா். வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கப்பட்டதை எதிா்த்து தொடுக்கப்பட்ட ஏராளமான மனுக்கள் விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் முடக்கி இருப்பதாகவும் அவா் குற்றம்சாட்டினாா்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மற்ற மனுக்களுடன் சோ்த்து புதிய மனுவும் வரும் 13-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனா்.