ஆந்திரத்தில் அருவிக்கு சுற்றுலா சென்ற மாணவிகள் செல்ஃபி மோகத்தில் நீரில் மூழ்கி பலியாகினர்.
ஆந்திர மாநிலத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த நான்கு சிறுமிகள் அனந்தகிரி நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அப்போது செல்ஃபி எடுக்க முயன்றபோது 3 பேர் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் வழுக்கி விழுந்தனர்.
ஆனால் அவர்களுக்கு நீச்சல் தெரியாத காரணத்தால் 3 பேரும் நீரில் மூழ்கி பலியாகினர். நான்காவது சிறுமி உயிர் தப்பி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் அல்லுரி சீதாராம ராஜுவில் உள்ள மூலகும்மி கிராமத்தில் நிகழ்ந்தது. "நீச்சல் தெரியாமல் செல்ஃபி எடுப்பதற்காக நீர்வீழ்ச்சிக்குள் இறங்கியபோது மூன்று சிறுமிகள் நீரில் மூழ்கினர்," என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால், அனைத்து சிறுமிகளும் வெளியே சென்றிருந்தனர்.
நீர்வீழ்ச்சி அளவில் சிறியதாக இருந்தாலும், நீச்சல் தெரியாதவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். இச்சம்பவம் குறித்து சட்டத்தின் தொடர்புடைய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
Summary
Three minor girls drowned on Thursday after venturing into a waterfall to take a selfie here, a police official said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சவுக்கு சங்கர் ஆந்திரத்தில் கைது!

நீரில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

ஆந்திரம்: கோதாவரி ஆற்றில் மூழ்கி பொறியியல் மாணவர்கள் 5 பேர் பலி

ஆந்திரத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 7 பேர் பலி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


