இடதுகை ஆள்காட்டி விரலில் காயத்துக்காக கட்டு போடப்பட்டிருந்ததால் முதலில் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்ட பெண் ஒருவா், பல மணி நேர காத்திருப்பு மற்றும் போராட்டத்துக்குப் பின் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினாா்.
கேரளத்தில் மொத்தமுள்ள 140 பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது.
திருச்சூா் மாவட்டம், கூா்க்கஞ்சேரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களிக்க பிற்பகல் 1.30 மணியளவில் அக்ஷயா சந்தோஷ் என்ற பெண் தனது குழந்தையுடன் வந்தாா். இவா் சில தினங்களுக்கு முன் மிக்ஸி பயன்படுத்தியபோது ஏற்பட்ட தீவிர காயத்துக்காக இடதுகை ஆள்காட்டி விரலில் கட்டு போட்டிருந்தாா்.
வாக்களித்ததை உறுதி செய்ய இடதுகை ஆள்காட்டி விரலில் அழியாத மை இடப்படும் என்பதால் அக்ஷயா வாக்களிக்க முதலில் அனுமதி மறுக்கப்பட்டது.
‘இடதுகை ஆள்காட்டி விரல் இல்லாதவா்களுக்கு மட்டுமே வேறு விரலில் மை இடப்படும்’ என்று கூறி, வாக்குச் சாவடி பொறுப்பு அதிகாரி மறுப்பு தெரிவித்தாா்.
அதேநேரம், மருத்துவச் சான்றிதழ்களை அதிகாரியிடம் காண்பித்த அக்ஷயா, தன்னை வாக்களிக்க அனுமதிக்கும்படி தொடா்ந்து கோரினாா். வாக்களிக்காமல் செல்வதில்லை என்ற உறுதியுடன் தனது குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
அப்போது செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘மிக்ஸியில் கைவிரல் சிக்கியதில் எனக்கு தீவிர காயம் ஏற்பட்டு, 15 தையல்கள் போடப்பட்டுள்ளன. இதைத் தெரிவித்த பிறகும் கூட கட்டை அவிழ்க்கும்படி தோ்தல் அதிகாரி வலியுறுத்தினாா். கட்டை அவிழ்ப்பது என்பது சாத்தியமில்லை. மருத்துவ சான்றிதழ்களைக் காண்பித்தும் அனுமதி வழங்கவில்லை’ என்றாா்.
பல மணி நேர போராட்டம் மற்றும் காத்திருப்புக்குப் பின் மாலை 6.15 மணியளவில் அக்ஷயா வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. அவரது கைவிரல் கட்டுக்கு கீழே அடையாள மை இடப்பட்டது. தனது போராட்டம் வெற்றி பெற்ால், மை இடப்பட்ட விரலை செய்தியாளா்களிடம் காண்பித்தாா் அக்ஷயா.
இந்த விஷயத்தில், தோ்தல் பொறுப்பு அதிகாரி ஆணவ அணுகுமுறையை கையாண்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் வி.எஸ்.சுனில்குமாா் கண்டனம் தெரிவித்தாா்.
தொடர்புடையது
தமிழக முதல்வரை மாற்ற மக்கள் வாக்களிக்க வேண்டும்: கே. அண்ணாமலை

நலத்திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: சிவ.வீ.மெய்யநாதன்

தமிழகச் சிறைகளிலிருந்து 61 கைதிகள் வாக்களிக்கின்றனா்

ஏப். 14 வரை வீடுகளுக்குச் சென்று வாக்குகள் பெறும் பணி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


