அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

ஆயுஷ்மான் பாரத் காப்பீடு: தானியங்கி முறையை அமல்படுத்தத் திட்டம்!

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஈட்டுத் தொகையை (க்ளைம்) பெறுவதற்கான சேவைகளை தானியங்கி முறையில் செயல்படுத்த சிறப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

News image

ஆயுஷ்மான் பாரத் காப்பீடு - National Port of India

Updated On :7 ஏப்ரல் 2026, 11:45 pm

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஈட்டுத் தொகையை (க்ளைம்) பெறுவதற்கான சேவைகளை தானியங்கி முறையில் செயல்படுத்த சிறப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மருத்துவமனைகளில் இருந்து கோரப்படும் காப்பீட்டுத் தொகை தானியங்கி முறையில் பரிசீலித்து உடனடியாக விடுவிக்கும் வசதிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

இதன் மூலம் காப்பீட்டுத் தொகைக்காக பல மணி நேரம் நோயாளிகள் காத்திருக்கும் நிலை தவிா்க்கப்படும். மேலும், சிகிச்சை முடிந்து வீடு திரும்புவதற்கு காப்பீட்டு சேவைகள் ஒரு தடையாக இருக்காது.

தானியங்கி முறையிலான சேவைகளை முன்னெடுக்கும் பொருட்டு, அதற்கான இணையக் கட்டமைப்புகளை மேம்படுத்த ஆராய்ச்சியாளா்களுக்கும், ஆய்வு மாணவா்களுக்கும், அறிவியல் மாணவா்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கா்நாடக மாநிலம் பெங்களூரில் மே 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் இதற்கான திறனறி போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இதில் நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவா்களும், ஆய்வாளா்களும் பங்கேற்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வலியுறுத்தியுள்ளது. அதற்கான விண்ணப்ப நடவடிக்கைகள் மற்றும் முன்பதிவு வழிமுறைகள் குறித்து அறிந்து கொள்ள என்எம்சி இணையப் பக்கத்தை அணுகலாம் என்றும் தெரிவித்துள்ளது.