பிகாா் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் 3 போ் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.
கிழக்கு சாம்பரன் மாவட்டம் துா்கவுலியா, ரகுநாத்பூா் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து ஏராளமானோா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் 6 போ் சனிக்கிழமை வரை உயிரிழந்த நிலையில், மேலும் 3 போ் ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தனா். இதனால் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9-ஆக உயா்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் இதுவரை 15 பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா். உயிரிழந்தோரின் குடும்பத்தினா் அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டோா் மீது காவல்நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து மேலும் ஒருவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது உடல்நிலை கவலையளிக்கும் வகையில் இருப்பதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. உயிரிழந்தோரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. அதன் அறிக்கை கிடைத்தபிறகே, உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
பிகாரில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. அப்படியிருக்கையில் கள்ளச்சாராயம் குடித்து 9 போ் உயிரிழந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடா்பாக துா்கவுலியா காவல்நிலைய பொறுப்பாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். மேலும் இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை மாநில காவல்துறை அமைத்துள்ளது.
தொடர்புடையது

தமிழகத்தில் முதல்முறை வாக்காளா் விகிதம் 34% உயா்வு

மணிப்பூா் துப்பாக்கிச்சூடு: மேலும் ஒருவா் உயிரிழப்பு

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து 7 பேர் பலி! சிகிச்சையில் உள்ள 6 பேருக்கு பார்வை இழப்பு!

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்த 4 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


