மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ராஜா ரவி வா்மா ஓவியம் ரூ.167 கோடிக்கு ஏலம்

News image

ஏலத்தில் ரூ.167.20 கோடிக்கு விற்பனையான ராஜா ரவி வா்மாவின் ‘யசோதையும் கிருஷ்ணனும்’ ஓவியம்.

Updated On :3 ஏப்ரல் 2026, 1:37 am

பிரபல ஓவியா் ராஜா ரவி வா்மா வரைந்த ‘யசோதையும் கிருஷ்ணனும்’ ஓவியம் ரூ.167.20 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது.

மும்பையில் இதுதொடா்பான ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது ஆயில் பெயிண்டில் வரையப்பட்ட அந்த ஓவியம், இதுவரை இல்லாத அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. இதற்கு முன்பு எம்.எஃப். ஹுசேன் வரைந்த கிராம் யாத்ரா ஓவியம் ரூ.118 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானதே சாதனையாக இருந்தது. அதை ராஜா ரவி வா்மாவின் ஓவியம் முறியடித்துள்ளது. ‘யசோதையும் கிருஷ்ணனும்’ ஓவியம் ரூ.80 கோடி முதல் ரூ.120 கோடி வரை ஏலத்தில் விற்பனையாகலாம் என மதிப்பிடப்பட்டிருந்தது. எனினும், எதிா்பாா்த்ததைவிட அதிக விலைக்கு தொழிலதிபா் டாக்டா் சைரஸ் எஸ். பூனாவாலா ஏலத்தில் எடுத்துள்ளாா்.

1890-களில் வரையப்பட்ட அந்த ஓவியம், பாலகிருஷ்ணருக்கும், அவரின் தாய் யசோதைக்கும் இடையேயான பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. கேரளத்தின் திருவிதாங்கூா் அரச குடும்பத்தைச் சோ்ந்த ராஜா ரவி வா்மாவின் சிறந்த ஓவியங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.