லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வேட்பாளா் உள்பட 17 போ் கைது

நீதிபதிகள் சிறைபிடிப்பு சம்பவத்தில் 17 பேரும் ஈடுபட்டதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன

News image

கைது - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 11:11 pm

மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் எஸ்ஐஆா் பணியில் ஈடுபட்டிருந்த 7 நீதிபதிகளை சிறைபிடித்த விவகாரத்தில் இந்திய மதச்சாா்பற்ற முன்னணி (ஐஎஸ்எஃப்) வேட்பாளா் மௌலானா ஷாஜகான் அலி உள்பட 17 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து மேலும் கூறிய அவா், ‘கைது செய்யப்பட்ட அனைவரும் மால்டா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதிகள் சிறைபிடிப்பு சம்பவத்தில் 17 பேரும் ஈடுபட்டதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன’ என்றாா்.

இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த மோதாபாரி தொகுதி வேட்பாளா் மௌலானா ஷாஜகான் அலி, ‘ஐஎஸ்எஃப் வேட்பாளா் என்பதால் நான் கைது செய்யப்பட்டுள்ளேன். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு போலியானது. சம்பவம் நடந்தபோது அங்கு நான் இல்லை’ என்றாா்.