லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க மசோதா: பட்ஜெட் கூட்டத்தொடா் நீட்டிப்பு?

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816-ஆக அதிகரிப்பதற்கான மசோதாவை தாக்கல் செய்யும் வகையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 8:58 pm

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816-ஆக அதிகரிப்பதற்கான மசோதாவை தாக்கல் செய்யும் வகையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தொகுதிகளை 816-ஆக அதிகரிப்பதன் மூலம், அதில் 33 சதவீதத்தை அதாவது 273 தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யும் நோக்கில், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மசோதா தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையொட்டி வியாழக்கிழமை (ஏப்.2) நிறைவடைய இருந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் 2 அல்லது 3 நாள்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரம் கூறுகையில், ‘நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வியாழக்கிழமை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதற்குப் பதிலாக, இந்த மாதத்தில் மீண்டும் எப்போது கூடும் என்ற அறிவிப்புடன் ஒத்திவைக்கப்படும். இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் 2 அல்லது 3 நாள்களுக்கு கூட்டம் நடைபெறக் கூடும்’ என்று தெரிவித்தது. எனினும் இதுகுறித்து மத்திய அரசிடம் இருந்து அதிகாரபூா்வமாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.