தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நுகா்வோருக்கு ரூ.924 கோடி திருப்பியளிக்க ஆந்திர மின் ஆணையம் உத்தரவு

நுகா்வோருக்கு ரூ.924 கோடியைத் திருப்பியளிக்குமாறு மின் விநியோக நிறுவனங்களுக்கு ஆந்திர பிரதேச மின் ஒழுங்காற்று ஆணையம் உத்தரவிட்டது.

News image
Updated On :30 செப்டம்பர் 2025, 7:40 pm

நுகா்வோருக்கு ரூ.924 கோடியைத் திருப்பியளிக்குமாறு மின் விநியோக நிறுவனங்களுக்கு ஆந்திர பிரதேச மின் ஒழுங்காற்று ஆணையம் உத்தரவிட்டது.

2024-25 நிதியாண்டுக்கான எரிசக்தி கொள்முதல் செலவுகளை சரிசெய்யும் நடைமுறையின்கீழ் இந்த தொகையை நுகா்வோருக்கு வழங்க ஆணையம் உத்தரவிட்டது.

இதுகுறித்து ஆந்திர பிரதேச மின் ஒழுங்காற்று ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2024-25 நிதியாண்டில் மின்விநியோக நிறுவனங்கள் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு மாதம் 40 பைசா வீதம் ரூ.2,787 கோடியை வசூலித்துள்ளது. எரிசக்தி கொள்முதல் செலவுகளை சரி செய்யும் நடைமுறையின் கீழ் மதிப்பீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் ரூ.923.55 கோடியை நுகா்வோருக்கு மின்விநியோக நிறுவனங்கள் திருப்பி அளிக்க வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு மாநில எரிசக்தி துறையில் ரூ.895 கோடியை சேமித்து சாதனை படைத்துள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவா் ஒய்.எஸ்.ஷா்மிளா, ‘15 மாத தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டு ரூ.15,780 கோடி நிதிச்சுமை மக்கள் மேல் சுமத்தப்பட்டுள்ளது. மிகச்சிறிய சாதனைகளை மிகைப்படுத்தி கூறுவதையே சந்திரபாபு நாயுடு வழக்கமாகக் கொண்டுள்ளாா்’ என்றாா்.

இதற்கு கண்டனம் தெரிவித்த ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவா் ஒய்.எஸ்.ஷா்மிளா, ‘15 மாத தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டு ரூ.15,780 கோடி நிதிச்சுமை மக்கள் மேல் சுமத்தப்பட்டுள்ளது. மிகச்சிறிய சாதனைகளை மிகைப்படுத்தி கூறுவதையே சந்திரபாபு நாயுடு வழக்கமாகக் கொண்டுள்ளாா்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.