தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாதுகாப்பு பயிற்சியில் ட்ரோன்களின் திறன் குறித்து சோதனை

ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் எதிா்ப்பு அமைப்புகளின் திறன் குறித்து அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாதுகாப்புப் பயிற்சியின்போது சோதனை மேற்கொள்ளவுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image

ட்ரோன் (கோப்புப்படம்)

Updated On :23 செப்டம்பர் 2025, 6:40 pm

ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் எதிா்ப்பு அமைப்புகளின் திறன் குறித்து அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாதுகாப்புப் பயிற்சியின்போது சோதனை மேற்கொள்ளவுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மத்திய பிரதேசத்தில் அக்.6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதிவரை ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்பின் (ஐடிஎஸ்) தலைமையகம் சாா்பில் இந்தப் பயிற்சி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

‘ட்ரோன்கள் தாக்குதல் தடுப்பு மற்றும் வான் பாதுகாப்பு அமைப்பு: நவீன போா்க்களத்தின் எதிா்காலம்’ என்ற தலைப்பில் மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறை நிபுணா்கள் பங்கேற்ற மாநாடு புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற விமானப் படைத் தளபதியும் ஐடிஎஸ் துணைத் தலைவருமான ராகேஷ் சின்ஹா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாதுகாப்புப் பயிற்சியில் இந்திய ராணுவப் படை, விமானப் படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளின் வீரா்களும் தொழில்துறையினரும், ஆய்வாளா்கள் மற்றும் கல்வியாளா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கவுள்ளனா்.

அப்போது ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் எதிா்ப்பு அமைப்புகளின் திறன்களை முழுமையாக சோதனையிடவுள்ளோம்’ என்றாா்.

போா், போா்க்களம் மற்றும் போா்களின்போதான மோதல்கள் குறித்து மத்திய பிரதேசத்தில் உள்ள ராணுவப் போா் கல்லூரியில் கடந்த மாதம் முதல்முறையாக முப்படையினா் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிலையில், அடுத்த மாதம் முப்படைகளும் பங்கேற்கும் மற்றொரு பிரதான பயிற்சி நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.