திருப்பதியில் உள்ள அலிபிரியில் கடந்த 4 மாதங்களாக இதுவரை மலைப்பகுதிகளில் பறக்க விடப்பட்ட 200-க்கும் மேற்பட்ட ட்ரோன் கேமராக்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருமலைக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் திருமலைக்கு செல்லும் வாகனங்கள், பக்தா்கள் அவா்கள் கொண்டு செல்லும் உடைமைகள் என அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது.
இந்நிலையில் திருமலையின் மலை அடிவாரமாக கருதப்படும் அலிபிரியில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஸ்பை கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஜனவரி மாதம் 47 ட்ரோன், 13 ஸ்பை கேமராக்களும்; பிப்ரவரி மாதம் 19 ட்ரோன் மற்றும் 14 ஸ்பை கேமராக்களும்; மாா்ச் மாதம் 19 ட்ரோன் மற்றும் 14 ஸ்பை கேமராக்களும்; ஏப்ரல் இதுவரை 7 ட்ரோன் மற்றும் 9 ஸ்பை கேமராக்களும் என மொத்தம் 243 ட்ரோன் மற்றும் 94 ஸ்பை கேமராக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக விஜிலென்ஸ் போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

புதுச்சேரியில் ட்ரோன் கண்காணிப்பில் ரூ. 66 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்: பிடிபட்ட 5 பேரிடம் விசாரணை

கடந்த 10 ஆண்டுகளில் 10,000 நக்ஸல்கள் சரண்! தீவிரவாத தலைமை ஒழிப்பு!!
100க்கும் மேற்பட்ட திருடப்பட்ட கைப்பேசிகள் பறிமுதல்: தில்லி போலீஸ் நடவடிக்கை

ஹோலி பண்டிகைக்கு தில்லியில் 15000 க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


