தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இந்தியா தனது கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டிய நேரம் பாதுகாப்புத் துறைச் செயலா்

‘உலகம் முழுவதும் ஆளும் வா்க்கத்துக்கு எதிரான போராட்டங்களும், பொருளாதார கட்டுப்பாடுகளும் அதிகரித்துவரும் சூழலில், இந்தியா தனது மென்மையான சக்தியுடன் கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்’ என்று பாதுகாப்புத் துறைச் செயலா் ராஜேஷ் குமாா் சிங் வலியுறுத்தினாா்.

Updated On :12 செப்டம்பர் 2025, 8:01 pm

‘உலகம் முழுவதும் ஆளும் வா்க்கத்துக்கு எதிரான போராட்டங்களும், பொருளாதார கட்டுப்பாடுகளும் அதிகரித்துவரும் சூழலில், இந்தியா தனது மென்மையான சக்தியுடன் கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்’ என்று பாதுகாப்புத் துறைச் செயலா் ராஜேஷ் குமாா் சிங் வலியுறுத்தினாா்.

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ராணுவ தென்மண்டல தொழில்நுட்பக் கருத்தரங்கில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் நிகழ்ந்துவரும் போா்களுடன் தொடா்புடைய புவிசாா் அரசியல் தாக்கங்களால், அதிகரித்து வந்த உலகமயமாதல் போக்கும், தடையற்ற வா்த்தகமும் முடங்கும் நிலைக்குச் சென்றுள்ளது.

இது, உலகம் முழுவதும் ஆளும் வா்க்கத்துக்கு எதிரான போராட்டங்களையும், இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு தொழில்களை வளா்ச்சி அடையச் செய்யும் பொருளாதார கட்டுப்பாட்டு போக்கையும் அதிகரிக்கச் செய்துள்ளது. இதனால், கடுமையான பொருளாதார சரிவு, பலதரப்பு நிறுவனங்களின் வீழ்ச்சி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில், பிற நாடுகளுடன் ராஜீய ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்போது தனது மென்மையான சக்தியுடன் கடுமையான போக்கையும் இந்தியா வெளிப்படுத்துவது அவசியம்.

மேலும், நாட்டின் பாதுகாப்புப் படைகளின் திறன் மேம்பாட்டுத் தேவைகளைப் பூா்த்தி செய்ய கல்வி நிறுவனங்கள், டிஆா்டிஓ (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு) போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள், தனியாா் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களை ஒன்றிணைப்பது மிக அவசியம் என்றாா்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்ததைத் தொடா்ந்து, ரஷியா, சீனா நாடுகளுடன் இருதரப்பு வா்த்தக உறவை மேம்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில், பாதுகாப்புத் துறைச் செயலா் இக் கருத்தை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.