டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நவராத்திரி - தீபாவளி வரை சுதேசி மேளா நடத்த அறிவுரை!

அந்தந்தத் தொகுதிகளில் 20 - 30 வணிகர்கள் மற்றும் கடைக்காரர்களை ஒருங்கிணைத்து ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

News image
நரேந்திர மோடி
Updated On :8 செப்டம்பர் 2025, 2:36 pm

இணையதளச் செய்திப் பிரிவு

உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்த நவராத்திரி - தீபாவளி போன்ற விழாக்காலங்கள் வரை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுதேசி மேளா நடத்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், அந்தந்தத் தொகுதிகளில் 20 - 30 வணிகர்கள் மற்றும் கடைக்காரர்களை ஒருங்கிணைத்து ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒவ்வொரு எம்.பி.யும் தங்கள் தொகுதியில் ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் சுதேசி பயன்பாட்டை வலியுறுத்தும் விதமாக கண்காட்சி நடத்த வேண்டும் என்றும் நமது பாரம்பரியம் என்ற கருப்பொருளை பறைசாற்றும் விதமாக அமைய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

உள்நாட்டுப் பொருள்களை அதிக எண்ணிக்கையில் பயன்படுத்துவதன் மூலம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி அடையும் எனக் குறிப்பிட்டார்.

இந்திய இறக்குமதி பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. அதிக வரி விதிப்பால், இந்திய உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகும் உருவாகியுள்ளது.

இதனைத் தவிர்க்கும் சூழலில் உள்நாட்டுத் தயாரிப்புகளை மக்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சுதேசி பயன்பாட்டை பிரதமர் மோடி ஊக்குவித்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, பண்டிகை நாள்களையொட்டி அதிக எண்ணிக்கையிலான உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எம்.பி.க்களுக்கு இன்று அறிவுறுத்தியுள்ளார்.

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் மீதும் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்துள்ளதால், அதனால் ஏற்படும் சாதகங்கள் குறித்தும் வணிகர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

summary

He urged MPs to hold and encourage swadehi melas from Navratri to Diwali: Sources

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.