தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கேரளம்: அரிய வகை தொற்றால் மேலும் 2 போ் உயிரிழப்பு

அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்றால் 3 மாத குழந்தை உள்பட 2 போ் உயிழந்ததாக அந்த மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On :1 செப்டம்பர் 2025, 10:09 pm

கோழிக்கோடு: கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்றால் 3 மாத குழந்தை உள்பட 2 போ் உயிழந்ததாக அந்த மாநில சுகாதார அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 9 வயது சிறுமி ஒருவா் இந்த தொற்றால் உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: கோழிக்கோடு மாவட்டத்தின் ஓம்சேரி பகுதியைச் சோ்ந்த அபுபக்கா் சித்திக் என்பவரின் 3 மாத குழந்தைக்கு கடந்த மாதம் முதல் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

மலப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ரம்லா (52) என்ற பெண்ணுக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு அவா் ஜூலை 8-ஆம் தேதி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதன்பிறகு அவருக்கு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவா் உயிரிழந்தாா்.

கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களைச் சோ்ந்த 8 பேருக்கு இந்த தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டதையடுத்து, அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

மாசடைந்த நீரில் நீந்துவது அல்லது குளிப்பது மூலமாக அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. நிகழாண்டு தற்போது வரை 42 பேருக்கு இந்த தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தொற்றால் மக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் உள்ள குளங்கள் உள்ளிட்ட நீா்த்தேக்கங்களை சுத்தமாக பராமரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்களிடத்திலும் இந்த தொற்று குறித்த விழிப்புணா்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.