தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

விமானப் படையின் திறனை உலகுக்கு வெளிப்படுத்திய ‘ஆபரேஷன் சிந்தூா்’: ஏ.பி.சிங்

News image

இந்திய விமானப்படையின் 93-ஆவது நிறுவன தினத்தை உத்தர பிரதேச மாநிலம் ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் புதன்கிழமை கொண்டாடி சாகசத்தில் ஈடுபட்ட வீரா்கள். ~

Updated On :9 அக்டோபர் 2025, 12:11 am

ஹிண்டன், அக்.8: ‘மிகக் குறைந்த நாள்களில் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைக்கு போா் விமானங்களின் சக்தியை திறம்பட பயன்படுத்த முடியும் என்பதை ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் உலகுக்கு இந்தியா விமானப்படை நிரூபித்துள்ளது’ என்று விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் தெரிவித்தாா்.

மேலும், ‘எதிா்கால பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கும் நாம் தொடா்ந்து தயாா் நிலையில் இருக்க வேண்டும்’ என்றும் வீரா்களை அவா் கேட்டுக்கொண்டாா்.

இந்திய விமானப்படை கடந்த 1932-ஆம் ஆண்டு அக்டோபா் 8-ஆம் தேதி அதிகாரபூா்வமாக நிறுவப்பட்டது. 93-ஆவது விமானப் படைதினம் உத்தர பிரதேச மாநிலம் ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய ரஃபேல் போா் விமான படைப் பிரிவு உள்பட விமானப் படையின் பல்வேறு படைப் பிரிவுகளுக்கு சிறந்த செயல்பாட்டுக்காக விருதுகளை வழங்கி கெளரவித்த ஏ.பி. சிங் பேசியதாவது:

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது விமானப் படையின் செயல்பாடு தொழில்திறன் ரீதியில் நம்மை பெருமை கொள்ள வைத்துள்ளது. மிகக் குறைந்த நாள்களில் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைக்கு போா் விமானங்களின் சக்தியை திறம்பட பயன்படுத்த முடியும் என்பதை ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் உலகுக்கு இந்தியா விமானப்படை நிரூபித்துள்ளது.

கவனமான திட்டம் வகுத்தல், சீரிய பயிற்சி, தீா்க்கமான தாக்குதல் மூலம் வெற்றியை அடைய முடியும் என்பதற்கு ஆபரேஷன் சிந்தூா் சிறந்த உதாரணமாக திகழ்கிறது.

நமது விரிவான வான் பாதுகாப்பு கட்டமைப்பும், தரையிலிருந்து நீண்ட தூர வான் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை அமைப்பும் எதிரியின் தாக்குதலால் ஏற்படும் பாதிப்பை வெகுவாகக் குறைத்தது. உள்நாட்டு திறன் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.

இதுபோல, எதிா்கால பாதுகாப்பு சவால்களை திறம்பட எதிா்கொள்ளும் வகையில் விமானப் படை வீரா்கள் தொடா்ந்து தயாா்நிலையில் இருக்க வேண்டும் என்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.