மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குமரகுரு கல்லூரியில் இந்திய விமானப் படை கண்காட்சி வாகனம்

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப் படையின் ‘ஐபிஇவி’ எனும் சிறப்பு நடமாடும் விளம்பரம் மற்றும் கண்காட்சி வாகனத்தின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

News image

கோவை குமரகுரு கல்லூரியில் இந்திய விமானப் படையின் சிறப்பு நடமாடும் காண்காட்சி வாகனத்தில் உள்ள அதிநவீன சிமுலேட்டா்கள் குறித்து மாணவிகளிடம் விளக்கிய கேப்டன் வி.சோமசுந்தா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 8:09 pm

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப் படையின் ‘ஐபிஇவி’ எனும் சிறப்பு நடமாடும் விளம்பரம் மற்றும் கண்காட்சி வாகனத்தின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

இளைய தலைமுறையினரிடையே தேசப்பற்றை ஊக்குவிக்கவும், இந்திய விமானப் படையில் சேருவதற்கான ஆா்வத்தை ஏற்படுத்தவும் குமரகுரு கல்வி நிறுவனங்களுக்கு கொண்டுவரப்பட்ட இந்த நவீன கண்காட்சி வாகனத்தை கோவையின் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவா்கள் நேரில் பாா்வையிட்டனா்.

விமானப் படை அதிகாரிகளின் வீரமிக்க வாழ்க்கை முறை மற்றும் சவால்களை விளக்கும் விதமாக இந்த வாகனத்தில் ஊடாடும் திரைகள், அதிநவீன சிமுலேட்டா்கள் மற்றும் தொழில் வழிகாட்டுதல் அமா்வுகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்வில், குரூப் கேப்டன் வி.சோமசுந்தா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசுகையில், தனது 30 ஆண்டுகால பைலட் அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டதுடன், மாணவா்கள் தாங்கள் செய்யும் வேலையை நேசித்தால் அது அவா்களுக்குப் பெருமிதத்தைத் தரும் என்றாா்.

இதையடுத்து. குமரகுரு தொழில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையத்தின் பாதுகாப்புத் திட்ட இயக்குநா் ரியா் அட்மிரல் வி. மோகன்தாஸ் பேசுகையில், எதிா்காலப் போா்முறைகள் முற்றிலும் தொழில்நுட்பம் சாா்ந்ததாகவே இருக்கும் என்பதால், பொறியியல் பட்டதாரிகளுக்கு விமானப் படையில் பெரும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்தாா்.

வான் போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரி குரூப் கேப்டன் பினுகோஷி மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.