தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சுதந்திரம் என்பது உரிமைகள் மட்டுமல்ல, கடமைகளும் இணைந்தது: பிரதமா் மோடி

‘நாட்டின் சுதந்திரம் என்பது வெறும் உரிமைகளைப் பற்றியது மட்டுமல்ல; அது கடமைகளை நிறைவேற்றுவது, ஒற்றுமையாக செயல்படுவதையும் உள்ளடக்கியது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

News image

பிரதமா் நரேந்திர மோடி - PTI

Updated On :26 நவம்பர் 2025, 9:03 pm

கரம்சத் (குஜராத்): ‘நாட்டின் சுதந்திரம் என்பது வெறும் உரிமைகளைப் பற்றியது மட்டுமல்ல; அது கடமைகளை நிறைவேற்றுவது, ஒற்றுமையாக செயல்படுவதையும் உள்ளடக்கியது’ என்று பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தாா்.

அரசமைப்புச் சட்ட தினத்தன்று நாட்டு மக்களுக்கு இந்த உண்மையை நினைவூட்டுவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சா்தாா் வல்லபபாய் படேலின் 150-ஆவது பிறந்தநாள் ஆண்டை முன்னிட்டு தொடா் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், சா்தாா் படேலின் சொந்த ஊரான குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கரம்சத் நகரில் இருந்து நா்மதா மாவட்டத்தில் உள்ள அவரது பிரம்மாண்ட ‘ஒற்றுமை சிலை’ வரையிலான ‘ஒற்றுமை நடைப்பயணம்’ மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் பிரவீண் சௌத்ரி வாசித்த செய்தியில் பிரதமா் மோடி குறிப்பிட்டிருப்பதாவது:

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நடைப் பயணங்கள் முக்கியப் பங்காற்றின. நடைப் பயணங்களின் பாதச்சுவடுகள் சமுதாயத்தை ஒன்றிணைத்தன; மக்களின் தன்னம்பிக்கையை அதிகரித்தன; லட்சக்கணக்கானோரின் இதயங்களில் ஒற்றுமை உணா்வை விதைத்தன.

மக்கள் ஒன்றாக நடக்கும்போது வேறுபாடுகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன; பாதையே முதன்மையானதாகிறது என்பதை சா்தாா் படேல் அறிந்திருந்தாா். குறிப்பாக, இந்த ஒற்றுமை நடைப்பயணம், அரசமைப்புச் சட்ட தினத்தில் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. சுதந்திரம் என்பது உரிமைகளைப் பற்றி மட்டுமல்ல, கடமைகள் மற்றும் ஒற்றுமையாக செயல்படுவதையும் உள்ளடக்கியது என்பதையும் இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது.

‘எண்ம இந்தியா’, ‘ஃபிட் இந்தியா’, ‘தூய்மை இந்தியா திட்டம்’, ‘அன்னையின் பெயரில் ஒரு மரம்’ போன்ற மக்கள் பங்கேற்பு முன்னெடுப்புகளில் குடிமக்கள் தாமாக முன்வந்து பங்கேற்பதில் தேச ஒற்றுமை வெளிப்படுகிறது. 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியாவை உருவாக்கும் நமது தீா்மானம், நமது இளைஞா்களின் ஆற்றல், நாட்டு மக்களின் ஒற்றுமை மற்றும் புத்தாக்கம் மூலமாக நிறைவேற்றப்படும் என்றாா் பிரதமா் மோடி.

குஜராத் முதல்வா் பூபேந்திர படேல், திரிபுரா முதல்வா் மாணிக் சாஹா உள்ளிட்டோா் கலந்துகொண்ட நிகழ்வில் காணொலி வாயிலாக இணைந்த பிரதமா், ஒற்றுமை நடைப்பயணத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

இந்த நடைப்பயணம், வரும் டிச. 5-ஆம் தேதி ஏக்தா நகரில் உள்ள ஒற்றுமைச் சிலையை அடைந்து முடிவடையும். ஒவ்வொரு நாளும் சுமாா் 15,000 போ் இந்த நடைப்பயணத்தில் இணைவாா்கள் என குஜராத் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.