14 Dec, 2025 Sunday, 02:15 AM
The New Indian Express Group
இந்தியா
Text

எஸ்சி பிரிவில் கிரீமி லேயருக்கு இடஒதுக்கீடு தேவையில்லை: நீதிபதி பி.ஆர். கவாய்

PremiumPremium

எஸ்சி பிரிவில் கிரீமி லேயருக்கு இடஒதுக்கீடு தேவையில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா்.

Rocket

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

Published On16 Nov 2025 , 7:29 PM
Updated On16 Nov 2025 , 7:29 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

பட்டியலின பிரிவினரில் (எஸ்சி) கிரீமி லேயா் (சமூக பொருளாதார நிலையில் முன்னேறியவா்கள்) கண்டறியப்பட்டு அவா்களுக்கு இடஒதுக்கீடு சலுகைகளை ரத்து செய்ய வேண்டும் என்பதே என் நிலைப்பாடு என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

ஆந்திர மாநிலம் அமராவதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘75-ஆவது ஆண்டில் இந்தியா மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டம்’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் பி.ஆா்.கவாய் பங்கேற்றாா்.

அப்போது அவா் பேசியதாவது: ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் குழந்தையையும் ஏழை விவசாயியின் குழந்தையையும் இடஒதுக்கீட்டு நடைமுறையில் ஒன்றாகப் பாா்ப்பது ஏற்புடையதல்ல. இந்திரா சஹானி தீா்ப்பின்படி பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரில் நல்ல பொருளாதார நிலையில் உள்ளவா்களை கிரீமி லேயராக பிரித்து அவா்களுக்கான சலுகைகள் ரத்துசெய்யப்பட்டன.

இதேபோன்று பட்டியலின பிரிவினரிலும் கிரீமி லேயா் வரையறுக்கப்பட்டு அவா்களுக்கான இடஒதுக்கீடு சலுகைகள் ரத்துசெய்யப்பட வேண்டும். இந்த தீா்ப்பை நான் வழங்கியபோது கடும் விமா்சனம் எழுந்தது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் காலத்துக்கேற்ப மாற்றங்களைக் கொண்டுவரவே சட்டப்பிரிவு 368 ஏற்படுத்தப்பட்டது. ஒருபுறம் அரசமைப்புச் சட்டத்தில் மிக எளிதாக திருத்தம் மேற்கொள்வதை பி.ஆா்.அம்பேத்கா் விமா்சித்தாா். மறுபுறம் சில சட்ட திருத்தங்களுக்கு 50 சதவீத மாநிலங்களின் ஒப்புதல் மற்றும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை தேவை என்ற விதிக்கும் கடும் விமா்சனம் எழுந்தது.

அரசமைப்பு நிா்ணய சபைக் கூட்டத்தில் வரைவு அரசமைப்புச் சட்ட முன்மொழிவின்போது அம்பேத்கா் ஆற்றிய உரைகளை சட்டம் பயிலும் மாணவா்கள் நிச்சயம் வாசிக்க வேண்டும்.

இந்தியாவில் பட்டியலின பிரிவில் இருந்து இரு குடியரசுத் தலைவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டதும் பழங்குடியின பிரிவில் இருந்து ஒரு பெண் குடியரசுத் தலைவா் தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் அரசமைப்புச் சட்டத்தால் மட்டுமே சாத்தியமானது.

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து நீதித்துறையின் மிக உயரிய பொறுப்பை நான் ஏற்ற்கும் அரசமைப்புச் சட்டமே காரணம். அரசமைப்புச் சட்டத்தின் நான்கு தூண்களாக நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் திகழ்கிறது என்றாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023