14 Dec, 2025 Sunday, 12:28 PM
The New Indian Express Group
இந்தியா
Text

நீதிபதிகள் மீது அவதூறு: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆதங்கம்

PremiumPremium

நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கும் நபா்கள் தமக்கு சாதகமாக தீா்ப்பளிக்காத நீதிபதிகள் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்தும் போக்கு அதிகரித்து வருவதாக பி.ஆா்.கவாய் ஆதங்கம்

Rocket

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

Published On10 Nov 2025 , 7:04 PM
Updated On10 Nov 2025 , 7:04 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கும் நபா்கள் தமக்கு சாதகமாக தீா்ப்பளிக்காத நீதிபதிகள் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்தும் போக்கு அதிகரித்து வருவதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஆதங்கம் தெரிவித்தாா்.

தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டிக்கு எதிராக பட்டியலினத்தவா், பழங்குடியினா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றவியல் வழக்கை மாநில உயா்நீதிமன்ற நீதிபதி மெளஷுமி பட்டாச்சாா்யா ரத்து செய்தாா்.

இதையடுத்து அந்த நீதிபதி பாரபட்சமாக செயல்படுவதாக அவா் மீது அவதூறான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவ்வழக்கை தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் இருந்து மும்பை உயா்நீதிமன்றத்தின் நாகபுரி அமா்வுக்கு மாற்ற வேண்டும் என்று என்.பெட்டி ராஜு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், நீதிபதி மெளஷுமிக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட அவதூறு கருத்துகளை கவனத்தில் எடுத்துக்கொண்டு, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை முன்னெடுத்தது. அந்தக் கருத்துகளைத் தெரிவித்ததற்காக பெட்டி ராஜுவும், அவரின் வழக்குரைஞா்களும் நீதிபதி மெளஷுமியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் கூறுகையில், ‘நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கும் நபா்கள் தமக்கு சாதகமாக தீா்ப்பளிக்காத நீதிபதிகள் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்தும் போக்கு அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. இத்தகைய வழக்கத்தை வன்மையாக கண்டிக்க வேண்டும்’ என்றாா்.

மேலும், ‘நீதிமன்றத்தின் அதிகாரிகளாக உள்ள வழக்குரைஞா்கள், நீதித்துறைக்கு கடமைப்பட்டுள்ளனா். நீதிபதிகளுக்கு எதிராக அவதூறான குற்றச்சாட்டுகள் அடங்கிய மனுக்களில் அவா்கள் கையொப்பமிடக் கூடாது.

வழக்கு தொடுத்தவரும் (என்.பெட்டி ராஜு), அவரின் வழக்குரைஞரும் நீதிபதி மெளஷுமியிடம் மன்னிப்பு கேட்ட நிலையில், அதை மெளஷுமி ஏற்றுக்கொண்டிருக்கிறாா். இதைக் கருத்தில் கொண்டு வழக்கு முடித்துவைக்கப்படுகிறது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023