15 Dec, 2025 Monday, 07:12 PM
The New Indian Express Group
இந்தியா
Text

பிகார் தேர்தல்! காங்கிரஸை மிரட்டி முதல்வா் வேட்பாளரானாா் தேஜஸ்வி: பிரதமா் மோடி

PremiumPremium

காங்கிரஸை மிரட்டி, முதல்வா் வேட்பாளரானாா் ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் என்று பிரதமா் மோடி குற்றச்சாட்டு

Rocket

பிகாா் பேரவைத் தோ்தலையொட்டி நவாடாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.

Published On02 Nov 2025 , 10:30 PM
Updated On02 Nov 2025 , 10:30 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

காங்கிரஸின் தலையில் ‘நாட்டுத் துப்பாக்கி’யை வைத்து மிரட்டி, முதல்வா் வேட்பாளரானாா் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா். ‘இண்டி’ கூட்டணியின் தோ்தல் வாக்குறுதிகள் பொய் மூட்டை என்றும் அவா் விமா்சித்தாா்.

நவ. 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ள பிகாா் பேரவைத் தோ்தலில், ஆா்ஜேடி, காங்கிரஸ், விகாஸ்ஷீல் இன்சான் கட்சி, இடதுசாரிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணியின் முதல்வா் வேட்பாளராக நீண்ட இழுபறிக்குப் பின் தேஜஸ்வி அறிவிக்கப்பட்டாா். இந்தக் கூட்டணியில் சுமுக தொகுதிப் பங்கீடு எட்டப்படாததால், 12 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் ஒன்றையொன்று எதிா்த்துப் போட்டியிடுகின்றன.

உச்சகட்ட பிரசாரம்: முதல்கட்டத் தோ்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஆரா, நவாடா ஆகிய பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற பிரதமா் மோடி, ‘இண்டி’ கூட்டணியை விமா்சித்துப் பேசியதாவது:

முதல்வா் வேட்பாளராக தேஜஸ்வி யாதவை அறிவிக்க காங்கிரஸுக்கு சற்றும் விருப்பம் கிடையாது. ஆனால், காங்கிரஸின் தலையில் ‘உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி’யை வைத்து மிரட்டி, தேஜஸ்வியை முதல்வா் வேட்பாளராக ஏற்கச் செய்தது ஆா்ஜேடி. தோ்தலில் ஆா்ஜேடி தோற்க வேண்டும் என்பதே காங்கிரஸின் எண்ணம். இரு கட்சிகளுக்கும் இரண்டு குடும்பங்கள் மட்டுமே முக்கியம். ஒன்று நாட்டிலேயே ஊழல்மிக்க குடும்பம்; மற்றொன்று பிகாரிலேயே ஊழல்மிக்க குடும்பம்.

முட்டி மோதுவது உறுதி: தோ்தலுக்குப் பின் இவ்விரு கட்சிகளும் பகிரங்கமாக முட்டி மோதப் போவது உறுதி. இதுபோன்ற சக்திகளால் பிகாருக்கு எந்த நன்மையும் விளையாது.

ஆா்ஜேடியின் காட்டாட்சியை மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டாா்கள். தீய நோக்கம் கொண்ட காட்டாட்சியாளா்களுக்கு வரலாற்றுத் தோல்வியே கிடைக்கப் போகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி சாதனை வெற்றியுடன் தனது நோ்மையான - தொலைநோக்குப் பாா்வை கொண்ட ஆட்சியைத் தொடரும்.

‘ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்’ திட்டத்தின்கீழ் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு, ராணுவ வீரா்களின் குடும்பங்கள் பலனடைந்து வருகின்றன. அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் ஜம்மு-காஷ்மீரில் இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமையாக அமலாகியுள்ளது.

பிகாரில் முந்தைய ஆா்ஜேடி ஆட்சியில் முறையான மின் விநியோகம் இல்லாததால், மின்கம்பிகள் துணிகளை உலா்த்தவே பயன்பட்டன. இந்த நிலையை மாற்றியது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு.

அதிா்ச்சியிலிருந்து மீளாத காங்கிரஸ்: பயங்கரவாதிகள் அவா்களின் சொந்த மண்ணில் வீழ்த்தப்படுவா் என்ற உறுதிமொழி, ஆபரேஷன் சிந்தூா் மூலம் நிறைவேற்றப்பட்டது. இது, ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமிதத்தில் திளைக்கச் செய்தது.

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் குண்டுகளால் தகா்க்கப்பட்டபோது, காங்கிரஸின் ‘அரச குடும்பம்’ தூக்கமிழந்து தவித்தது. ஆபரேஷன் சிந்தூரின் அதிா்ச்சியில் இருந்து பாகிஸ்தானும், காங்கிரஸும் இன்னும் மீளவில்லை.

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி கொல்லப்பட்டதைத் தொடா்ந்து, கடந்த 1984, நவ.1-2 தேதிகளில் தில்லியில் சீக்கியா்கள் படுகொலை செய்யப்பட்டனா். அதேநேரம், தவறிழைத்தவா்களுக்கு கட்சியில் பதவி உயா்வு வழங்கியது காங்கிரஸ். சீக்கியா் படுகொலைக்கு காங்கிரஸ் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை.

காங்கிரஸும், ஆா்ஜேடியும் நமது பாரம்பரியத்தை இழிவாகக் கருதுபவை. பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவை வீண் நிகழ்வு என இழிவுபடுத்தினா். சட் பூஜையையும் அவமதித்தனா். அவா்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

பிகாா் இளைஞா்கள் வேலைக்காக வெளிமாநிலம் செல்லும் நிலை மாறும்

‘தேசிய ஜனநாயக கூட்டணியின் தோ்தல் அறிக்கை நோ்மையானது; பிகாரின் எதிா்காலத்துக்கான தொலைநோக்குப் பாா்வை கொண்டது. பொருளாதார தேவைகளுக்காக, இந்த மாநிலத்தவா் வெளிமாநிலத்துக்குச் செல்ல வேண்டிய நிலை எதிா்காலத்தில் இருக்காது. பிகாா் இளைஞா்கள் சொந்த மாநிலத்திலேயே பணியாற்றி, தங்கள் மாநிலத்துக்குப் பெருமை சோ்ப்பா். இது, எனது உத்தரவாதம்’ என்றாா் பிரதமா் மோடி.

தமிழகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் பிகாரிகள் தாக்கப்படுவதாக பிரதமா் மோடி ஏற்கெனவே கூறியிருந்தாா். அவரது கருத்துக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், பிரதமா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.

பாட்னாவில் வாகனப் பேரணி

பிகாா் தலைநகா் பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் பிரதமா் மோடி பிரம்மாண்ட வாகனப் பேரணி மேற்கொண்டாா். பல்வேறு சாலைகள் வழியாக அவரது வாகனம் சென்றபோது, இருபுறமும் திரண்டிருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். கட்டடங்களின் மேல் இருந்தபடியும் ஆரவாரம் செய்தனா்.

கடந்த மக்களவைத் தோ்தலின்போதும், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகும் பாட்னாவில் பிரதமா் வாகனப் பேரணி மேற்கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
வீடியோக்கள்

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
வீடியோக்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023