அஸ்ஸாம் குவாஹாத்தியில் உள்ள காமாக்யா கோயிலில் விரைவில் ரோப்கார் வசதி கட்டப்படும் என மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் காமாக்யா கோயிலுக்கு அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வருகை தந்தார். மக்களின் பயணத்தை எளிதக்கக்கூடிய மேம்பாட்டுத் திட்டத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
காமாக்யா தேவி கோயிலுக்குச் செல்லும் பயணத்தை எளிதாக்கவும், நேரத்தைச் சிக்கனமாக்கவும் ரயில் நிலையத்திலிருந்து காமாக்யா கோயிலுக்கும், சோனாராமிலிருந்து காமாக்யா கோயிலுக்கும் ரோப் வே (ரோப் கார்) வசதி விரைவில் தொடங்கப்படும்.
இரண்டு ரோப் வேக்களிலும் பணிகள் நடந்து வருகின்றன. டெண்டர் செயல்முறை ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளது. பல ரோப் வே வசதிக்கான சாத்தியக்கூறு பற்றி ஆய்வு நடந்து வருகிறது.
காமாக்யா கோயிலுக்கு இரண்டு ரோப்வேக்களின் கட்டுமானமும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் கோயிலுக்கு வருகைதரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் விரைவான போக்குவரத்து முறையை எளிதாக்கவும், பயண நேரத்தைக் குறையுக்கவும் இது பயன்படும். சுற்றுலாவை மேம்படுத்துவதோடு, இதன்மூலம் பொருளாதாரமும் உயரும் என்று அவர் கூறினார்.
காமாக்யா தேவியின் வருடாந்திர மாதவிடாய் சுழற்சியைக் குறிக்கும் அம்புபாச்சி மேளா ஜூன் 22 தொடங்கி 26ல் நிறைவடைந்தது. தேவியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடி வருகின்றனர்.
ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்திருந்ததால் மேளா நிறைவடைந்து இரண்டு நாள்கள் கழித்து காமாக்யா தேவியை தரிசிக்க வந்துள்ளேன்.
குடும்பத்தோடு கோயிலுக்கு வருகை தந்திருந்த முதல்வர் அஸ்ஸாம் மக்களின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்தார்.
அம்புபாச்சி விழாவை ஏற்பாடு செய்ததற்காகக் கோயில் நிர்வாகக் குழு, சுற்றுலாத் துறை, அமைச்சர் ரஞ்சித் குமார் தாஸ் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார்.
SUMMARY
Assam CM Sarma announces construction of two ropeways to Kamakhya Temple
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜனநாயகக் கடமையாற்றினார் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா!

அஸ்ஸாம் முதல்வர் மனைவிக்கு துபையில் சொத்துகள்: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

இந்தியாவின் ஊழல் மிகுந்த முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா: ராகுல்!

3-வது முறையாக ஆட்சியை தக்கவைக்க அசாம் முதல்வரின் புதிய முயற்சி!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


