தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

ரூ.80க்கு ஜியோ அறிமுகம் செய்த சூப்பர் ரீசார்ஜ் பிளான்! ஆனால்?

ரூ.80க்கு ஜியோ அறிமுகம் செய்த சூப்பர் ரீசார்ஜ் பிளான்! அதாவது 11 மாதத்துக்கு ரூ.895 செலுத்த வேண்டும்

News image

ஜியோ திட்டம்

Updated On :21 ஜூன் 2025, 10:42 am

11 மாதங்களுக்கு ரூ.895 செலுத்தி ரீசார்ஜ் செய்யும் புதிய திட்டத்தை ஜியோ நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.

டேட்டா அதிகம் தேவையில்லை. அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றால், ஜியோ அறிமுகப்படுத்தியிருக்கும் 11 மாதத்துக்கு ரூ.895 ரீசார்ஜ் திட்டம் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அளவில்லா அழைப்பு மற்றும் 24 ஜிபி டேட்டா வசதியுடன் 11 மாதத்துக்கு ரூ.895 ரீசார்ஜ் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இது தற்போதிருக்கும் திட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் 28 நாள்களுக்கு வெறும் 80 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் அளவுக்குத்தான் வருகிறது.

ஆனால், இந்த திட்டம் ஜியோ போன் மற்றும் ஜியோ பாரத் போன் வைத்திருப்பவர்களுக்குத்தான் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சாதாரண ஜியோ சிம் வைத்திருப்பவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஒருவேளை எதிர்காலத்தில் போன் வாங்கத் திட்டமிட்டிருந்தால், இந்த ஜியோ ஃபீச்சர் போன்களை வாங்கி, இந்த ரீசார்ஜ் வாய்ப்பைப் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.