தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.2.3 கோடி பரிசுத் தொகையுடன் போட்டி: மத்திய அரசு

புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.2.3 கோடி பரிசுத் தொகையுடன் ஒரு போட்டியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

News image

சூரிய மின்சக்தி - file photo

Updated On :21 ஜூன் 2025, 11:24 am

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதில், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க ரூ.2.3 கோடி மதிப்பிலான பரிசுகளுடன் கூடிய புத்தாக்க நிறுவனங்களுக்கான போட்டியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தப் போட்டியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்படும் புத்தாக்க நிறுவனங்கள் அல்லது கண்டுபிடிப்பாளர்கள் ரூ.2.3 கோடி மதிப்பிலான போட்டியில் இடம்பெறுவார்கள். இதில் முதல் பரிசுக்கு ரூ.1 கோடி, இரண்டாம் பரிசுக்கு ரூ.50 லட்சம், மூன்றாம் பரிசுக்கு ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்றும், ஆறுதல் பரிசாக தலா 10 நிறுவனங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டடங்களின் மேற்கூரையில் சூரிய சக்தி தகடுகளை பொருத்தும் பணியை விரைவுபடுத்தவும் விநியோகிக்கவும் ரூ.2.3 கோடி பரிசுத் தொகையுடன் கூடிய புதுமையான 'ஸ்டார்ட்-அப் போட்டியை' மத்திய அரசு தொடங்கியிருக்கிறது.

விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கும் நிலையில் கடைசி தேதி ஆகஸ்ட் 20 என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியின் முடிவுகள் செப்டம்பர் 10ஆம் தேதி அறிவிக்கப்படவிருக்கிறது.

வெறும் பரிசுத் தொகை மட்டுமல்லாமல், வெற்றியாளர்கள் புத்தாக்க நிறுவனங்களைத் தொடங்கி நடத்துவதற்கான ஆதரவு மற்றும் முன்னோடி திட்டங்களைத் தொடங்கி நடத்துவதற்கான வாய்ப்பு மற்றும் உரிமம் பெற்ற நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து ஆலோசனைகள் பெற்று புத்தாக்க திட்டங்களுக்கு உரிமம் பெற்றுத்தரப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.