புணேவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனில் செல்ஃபி எடுத்து, இதுகுறித்து யாரிடமாவது தெரிவித்தால் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், புணேவில் உள்ள கோந்த்வா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 22 வயது பெண் தனது சகோதரருடன் வசித்து வந்தார்.
புதன்கிழமை மாலை அவரது சகோதரர் வெளியூர் சென்றிருந்த நிலையில், அந்த பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு 7.30 மணியளவில் அப்பெண்ணின் வீட்டுக்கு வங்கியில் இருந்து கூரியர் வந்துள்ளதாகவும் அதனை டெலிவரி செய்ய வந்திருப்பதாகவும் ஒரு நபர் கூறியுள்ளார்.
இதையடுத்து, கையெழுத்திட பேனா எடுப்பதற்காக அப்பெண் வீட்டுக்குள் சென்ற நிலையில், வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் கதவை உள்புறமாக தாலிட்டுள்ளார்.
அந்த பெண்ணின் முகத்தில் மயக்க மருந்து அடித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், அப்பெண்ணின் செல்போனில் செல்ஃபி எடுத்த அந்த நபர், இதுகுறித்து யாரிடமாவது தெரிவித்தால் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவேன் என்று அதில் குறிப்பிட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இரவு 8.30 மணியளவில் மயக்கம் தெளிந்தவுடன் அப்பெண் தனது உறவினருக்கு தகவல் அளித்துள்ளார். தொடர்ந்து காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுடன் பேசிய காவல் துணை ஆணையர் ராஜ்குமார் ஷிண்டே, ”மயக்க மருந்து போன்ற திரவம் பெண்ணின் முகத்தில் அடிக்கப்பட்டதால், அந்த பெண்ணுக்கு நடந்தது பற்றிய சுயநினைவு இல்லை. எந்த மாதிரியான திரவம் அடிக்கப்பட்டது என்பது பற்றி தடயவியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளியின் முகம் அடையாளம் காணப்பட்டுள்ளது. 10 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது, குற்றவாளி விரைவில் பிடிபடுவார்” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
A man entered a house in an apartment complex in Pune and sexually assaulted a young woman.
இதையும் படிக்க : தில்லியில் தாய், மகன் கொடூரக் கொலை! நடந்தது என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை சிறுமி பாலியல் வன்கொடுமை: மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!
மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்!

பாலியல் குற்றச்சாட்டு! இயக்குநர் ரஞ்சித் ஜாமீனில் விடுவிப்பு!

'நான்தான் கடவுள்' பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார்! மகாராஷ்டிரத்தில் அதிர்ச்சி!!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


