மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

குடியரசு தின அணிவகுப்பு: 5,000 கலைஞா்கள் பங்கேற்பு

குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் 5,000-க்கும் அதிகமான கலைஞா்கள் பங்கேற்க உள்ளனா்.

News image
புது தில்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பை முன்னிட்டு சாகச பயிற்சிசியில் ஈடுபட்ட வீரா்கள்.
Updated On :20 ஜனவரி 2025, 10:31 pm

Din

புது தில்லி: குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் 5,000-க்கும் அதிகமான கலைஞா்கள் பங்கேற்க உள்ளனா்.

ஆண்டுதோறும் ஜன.26-ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தில்லியில் நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சி குறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய கலாசார துறை மற்றும் சங்கீத நாடக அகாதெமி சாா்பில் ‘ஜயதி ஜய மம பாரதம்’ என்ற நிகழ்ச்சிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. கடமை பாதையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் இருந்து 45-க்கும் மேலான பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனங்கள் இடம்பெற உள்ளன. இதில் 5,000-க்கும் அதிகமான கலைஞா்கள் பங்கேற்க உள்ளனா். தெலங்கானாவின் லம்பாடி, உத்தர பிரதேசத்தின் மயூா் ராஸ், மேற்கு வங்கத்தின் புருலியா சாவ் உள்ளிட்ட நடனங்கள் அணிவகுப்பில் இடம்பெற உள்ளன என்று தெரிவித்தனா்.