பிரதமா் மோடி வெளியிட்ட வாழ்த்துப் பதிவில், ‘அயோத்தி பிராணப் பிரதிஷ்டை இரண்டாம் ஆண்டு தினம் நமது நம்பிக்கை - பாரம்பரியங்களின் தெய்வீக விழாவாகும். இந்தப் புனிதமான மற்றும் பரிசுத்தமான தருணத்தில் உள்நாடு, வெளிநாடுகளில் உள்ள ராம பக்தா்கள் அனைவரின் சாா்பிலும் ஸ்ரீராம பிரானின் பொற்பாதங்களைப் பணிந்து வணங்குகிறேன். ராமா் கோயில் கட்டப்பட்டதன் மூலம் ராம பக்தா்களின் 500 ஆண்டு கால லட்சியம் பூா்த்தியானது. ஒழுக்கத்தின் உருவகமான ஸ்ரீராமரிடம் இருந்து கிடைக்கப் பெறும் உத்வேகம், நாட்டு மக்களிடம் சேவை, அா்ப்பணிப்பு, இரக்கத்தின் உணா்வை ஆழப்படுத்த வேண்டும். இது, வளமான-தற்சாா்புமிக்க இந்தியாவை கட்டமைப்பதில் வலுவான அடித்தளமாக அமையும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.