18 Dec, 2025 Thursday, 01:38 PM
The New Indian Express Group
இந்தியா
Text

முன்னாள் தலைமை நீதிபதி மீது காலணி வீசிய சம்பவம்: ‘தடுப்பு நடவடிக்கையைப் பரிந்துரைக்க வேண்டும்’

PremiumPremium

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மீது காலணி வீசியது போன்ற சம்பவம் வருங்காலத்தில் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்குமாறு மத்திய அரசு, உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் (எஸ்சிபிஏ) ஆகியவற்றிடம் உச்சநீதிமன்றம் புதன்கிழமை கேட்டுக்கொண்டது.

Rocket

உச்ச நீதிமன்றம்

Published On17 Dec 2025 , 7:53 PM
Updated On17 Dec 2025 , 7:53 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மீது காலணி வீசியது போன்ற சம்பவம் வருங்காலத்தில் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்குமாறு மத்திய அரசு, உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் (எஸ்சிபிஏ) ஆகியவற்றிடம் உச்சநீதிமன்றம் புதன்கிழமை கேட்டுக்கொண்டது.

கடந்த அக். 6-ஆம் தேதி உச்சநீதிமன்ற வளாகத்தில் அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மீது வழக்குரைஞா் ராகேஷ் கிஷோா் (71) காலணியை வீச முயன்றாா். இதைத் தொடா்ந்து, அவரின் உரிமத்தை இந்திய வழக்குரைஞா் சங்கம் ரத்து செய்தது.

அவா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் எஸ்சிபிஏ மனு தாக்கல் செய்தது. இந்த மனு உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மீது காலணி வீசியது போன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நடைபெறக் கூடாது. அத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, எஸ்சிபிஏ தலைவரும் மூத்த வழக்குரைருமான விகாஸ் சிங் ஆகியோா் பரிந்துரைக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களை ஊடகங்கள் வெளியிடும்போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் அவா்கள் பரிந்துரைக்க வேண்டும் ’ என்று கேட்டுக்கொண்டனா்.

முன்னதாக, ராகேஷ் கிஷோா் மீது குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அப்போதைய தலைமை நீதிபதி கவாயும் உச்சநீதிமன்றமும் விருப்பம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
வீடியோக்கள்

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
வீடியோக்கள்

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
வீடியோக்கள்

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
வீடியோக்கள்

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
வீடியோக்கள்

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
வீடியோக்கள்

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023