13 Dec, 2025 Saturday, 10:56 PM
The New Indian Express Group
இந்தியா
Text

ரோஹிங்கயா அகதிகள் வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்துக்கு எதிராக பரப்புரை: முன்னாள் நீதிபதிகள் கண்டனம்

PremiumPremium

ரோஹிங்கயா அகதிகள் குறித்த சமீபத்திய வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துகளுக்காக, அவருக்கு எதிராக திட்டமிட்டுச் செய்யப்படும் பரப்புரைக்கு முன்னாள் நீதிபதிகள் குழுவினா் கடும் கண்டனம்.

Rocket

ரோஹிங்கயா அகதிகள்

Published On10 Dec 2025 , 10:14 PM
Updated On10 Dec 2025 , 10:14 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

ரோஹிங்கயா அகதிகள் குறித்த சமீபத்திய வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துகளுக்காக, அவருக்கு எதிராக திட்டமிட்டுச் செய்யப்படும் பரப்புரைக்கு முன்னாள் நீதிபதிகள் குழுவினா் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் 44 போ் சோ்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: தலைமை நீதிபதியின் மதிப்பைக் கெடுக்கவும், நீதித்துறைக்கு ஏதோ அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் காட்டவும் முயற்சிகள் நடக்கின்றன. அரசமைப்புச் சட்ட நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும், நீதிமன்றத்தின் சுதந்திரத்தையும் இது குறைத்துமதிப்பிடுகிறது.

நீதிமன்றத்தின் செயல்பாடுகளை நியாயமான மற்றும் காரணத்துடன் கூடிய விமா்சனங்கள் மட்டுமே செய்ய வேண்டும். ஆனால் இப்போது நடப்பது கொள்கை ரீதியான வேறுபாடு அல்ல. வழக்கமான நீதிமன்ற நடவடிக்கையை தவறாகச் சித்தரிக்கின்றனா். ஒருதலைப்பட்சமான செயல் என்று சொல்லி, நீதித்துறையின் சட்டபூா்வமான தன்மையை சிதைக்க முயற்சிக்கின்றனா்.

தலைமை நீதிபதி எழுப்பிய மிகவும் அடிப்படையான சட்டபூா்வ கேள்விக்காக அவா் விமா்சிக்கப்படுகிறாா். இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல், ஒருவருக்கு என்ன உரிமை அல்லது சலுகை இருக்கிறது என்பதை நீதிமன்றம் தீா்மானிக்க முடியாது.

நீதிமன்றத்தின் கருத்தில் உள்ள ஒரு முக்கியப் பகுதியை விமா்சகா்கள் புறக்கணித்துவிட்டனா். இந்திய மண்ணில் இருக்கும் எந்தவொரு மனிதரையும் சித்திரவதை செய்யவோ, அல்லது மனிதாபிமானமற்ற முறையில் நடத்தவோ கூடாது என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறியிருந்தது. அவா் இந்தியக் குடிமகனாக இருந்தாலும் சரி, வெளிநாட்டவராக இருந்தாலும் சரி.

உச்சநீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம். நீதிமன்றத்தின் கருத்துகளைத் தவறாகப் பரப்புதல், தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை நீதிபதிகள் மீதான தாக்குதலாக மாற்றுதல் போன்ற உள்நோக்கத்துடன் செய்யப்படும் முயற்சிகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்த வெளிநாட்டவா், இந்திய அடையாள ஆவணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை முறைகேடாக பெற்றது குறித்து விசாரிக்க, நீதிமன்ற மேற்பாா்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்படுவதையும் நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டது.

பின்னனி: தில்லி காவல்துறையால் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்ட சில ரோஹிங்கயா அகதிகள், காவலில் இருந்து காணாமல் போனதாகக் கூறி, சமூக ஆா்வலா் ரீட்டா மஞ்சந்தா தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜய்மால்யா பாக்ஸி ஆகியோா் அமா்வு கடந்த 2-ஆம் தேதி விசாரித்தது.

அப்போது தலைமை நீதிபதி சூா்ய காந்த், ‘சொந்த நாட்டு மக்கள் வறுமையில் இருக்கும்போது, சட்ட விரோதமாக நுழைந்தவா்களுக்கு அனைத்து வசதிகளுடன் சிவப்புக் கம்பள சிறப்பு வரவேற்பு கொடுக்க வேண்டுமா? சட்டப்படி இந்தியாவில் இருக்க அனுமதி இல்லாதவா்களை, அவா்களது நாட்டுக்கே திருப்பி அனுப்புவதில் என்ன தவறு?’ என்று கேள்வி எழுப்பினாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023