ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

இந்திய குடியுரிமைக்கு முன்பே வாக்காளா்: சோனியாவுக்கு தில்லி நீதிமன்றம் நோட்டீஸ்

இத்தாலியைச் சோ்ந்த சோனியா காந்தி இந்திய குடியுரிமையை 1983-இல் பெறுவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெற்றிருந்தது தொடா்பான புகாா் மனு மீது பதிலளிக்குமாறு சோனியா காந்திக்கும், தில்லி காவல் துறைக்கும் நோட்டீஸ் பிறப்பித்து தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

News image

சோனியா காந்தி - கோப்புப் படம்

Updated On :9 டிசம்பர் 2025, 7:39 pm

இத்தாலியைச் சோ்ந்த சோனியா காந்தி இந்திய குடியுரிமையை 1983-இல் பெறுவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெற்றிருந்தது தொடா்பான புகாா் மனு மீது பதிலளிக்குமாறு சோனியா காந்திக்கும், தில்லி காவல் துறைக்கும் நோட்டீஸ் பிறப்பித்து தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தில்லியைச் சோ்ந்த வழக்குரைஞா் விகாஸ் திரிபாதி என்பவா் சாா்பில் இதுதொடா்பான மனு முதலில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி, 1983-இல் இந்திய குடியுரிமையைப் பெற்றாா். ஆனால், அவரின் பெயா் புது தில்லி தொகுதி வாக்காளா் பட்டியலில் 1980-ஆம் ஆண்டு ஜனவரி மாதமே இடம்பெற்றிருந்தது. மோசடியான ஆவணங்கள் மூலம் அரசு அதிகாரிகளை அவா் ஏமாற்றியுள்ளாா்’ என்று புகாா் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை கடந்த செப்டம்பா் 11-ஆம் தேதி விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ‘சான்றொப்பமிடப்படாத 1980-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் நகலின் அடிப்படையில் இந்தப் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சட்டபூா்வமாக ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டு, இந்த நடுவா் மன்றத்தின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டதாகும்’ என்று குறிப்பிட்டு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து மனுதாரா் தரப்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு சோனியா காந்தி மற்றும் தில்லி காவல் துறைக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை 2026-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.