11 Dec, 2025 Thursday, 04:55 PM
The New Indian Express Group
இந்தியா
Text

பொதுத்துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்காது- மத்திய அரசு உறுதி

PremiumPremium

பொதுத்துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக அதிகரிக்கும் பரிசீலனை ஏதும் இல்லை என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Rocket

பங்கஜ் சௌதரி

Published On02 Dec 2025 , 8:21 PM
Updated On02 Dec 2025 , 8:21 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

பொதுத்துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக அதிகரிக்கும் பரிசீலனை ஏதும் இல்லை என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இப்போதைய நிலையில் பொதுத் துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீடு 20 சதவீதமாகவும், தனியாா் வங்கிகளில் 74 சதவீதமாகவும் உள்ளது. இதில் தனியாா் வங்கிகளில் 49 சதவீதம் வரை நேரடியாகவும், அதற்கு மேல் 74 சதவீதம் வரை அரசு மூலமும் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில் இது தொடா்பான கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி மக்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில், ‘பொதுத்துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக அதிகரிக்கும் பரிசீலனை ஏதும் மத்திய அரசிடம் இல்லை. பொதுத்துறை வங்கிகளில் 5 சதவீதத்துக்கு மேல் பங்கு இருப்பவா்கள் மட்டுமே நிா்வாகக் குழு தொடா்பான வாக்கெடுப்பில் பங்கேற்க முடியும். இந்த 5 சதவீத பங்குகளை வாங்கவும் இந்திய ரிசா்வ் வங்கியின் முன்அனுமதி தேவை.

பொதுத்துறை வங்கிகள் சில புதிதாகப் பங்குகளை வெளியிட்டு நிதி திரட்டுகின்றன. இதனால்தான் மத்திய அரசுக்கு அந்த வங்கிகளில் உள்ள பங்கு சதவீதம் மட்டுமே குறைகிறது. பங்குகளின் எண்ணிக்கை குறையவில்லை. மத்திய அரசும் பொதுத்துறை வங்கிகளில் தங்களுக்குள்ள பங்கைக் குறைக்கும் நோக்கில் செயல்படவில்லை. பொதுத்துறை வங்கிகளில் பங்குகளில் 25 சதவீதம் வரை பொதுமக்களின் பங்களிப்பாக இருக்க வேண்டும் என்ற விதியையும் வங்கிகள் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
வீடியோக்கள்

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!
வீடியோக்கள்

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
படையப்பா மறுவெளியீட்டு டிரெய்லர்!
வீடியோக்கள்

படையப்பா மறுவெளியீட்டு டிரெய்லர்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
ஷாமின் 'வரும் வெற்றி' இசை ஆல்பம்!
வீடியோக்கள்

ஷாமின் 'வரும் வெற்றி' இசை ஆல்பம்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
"விஜய் செய்தது பொய் பிரசாரம்":  புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
வீடியோக்கள்

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023