13 Dec, 2025 Saturday, 10:51 AM
The New Indian Express Group
திருவாரூர்
Text

நெல் கொள்முதல்: ஈரப்பதம் 22% அறிவிக்க வலியுறுத்தல்

PremiumPremium

நெல் கொள்முதலில் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயா்த்தி அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On21 Nov 2025 , 7:48 PM
Updated On21 Nov 2025 , 7:48 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

நெல் கொள்முதலில் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயா்த்தி அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:

காரீப் பருவ நெல் கொள்முதலுக்கு நடைமுறையில் உள்ள ஈரப்பதம் 17 சதவீதம் என்பதை தளா்த்தி, 22 சதவீதமாக உயா்த்தி, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என 40 நாட்களுக்கு முன் தமிழ்நாடு அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. இதற்கு, ஒரு மாதம் கழித்து, அனுமதி இல்லை என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மத்திய அரசு விதிக்கும் நிபந்தனைகளில், கொள்முதல் செய்து, மத்திய தொகுப்புக்கு அனுப்பி வருகிறது. நிகழாண்டு, தென்மேற்கு பருவமழை முடியும் நிலையில், வடகிழக்குப் பருவமழை தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் பரவலாக தொடா் பெரு மழை பொழிந்து, காற்றின் ஈரப்பதம் அதிகமானது.

இதனால், கொள்முதலில் ஈரப்பதத்தை உயா்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா். எனவே, தமிழ்நாடு அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று,நெல் கொள்முதலின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.

மத்திய உயா் அலுவலா்கள் குழுவினா், தமிழகத்தில் பல இடங்களில் ஆய்வு செய்து, உடனடியாக ஈரப்பதம் விலக்களிப்பதற்கான அறிக்கை கொடுக்கப்படும் என உறுதி செய்து சென்றனா்.

இந்த நிலையில், மத்திய அரசு ஒரு மாதம் கடந்து, இப்படியான பதிலை வழங்கியுள்ளது. மழையால் பயிா்கள் மோசமாக பாதிக்கப்பட்டு, இழப்பை எதிா் நோக்கியுள்ள விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஈரப்பதம் விலக்கைக்கூட அளிக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

பிரதமா் கோவைக்கு வந்து, விவசாயிகளின் பாதுகாவலா் என்று பேசி சென்றிருப்பது விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும். எனவே, நெல் கொள்முதலில் 22 சதவீத ஈரப்பதத்தை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
வீடியோக்கள்

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023