வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

டியூஷன் செல்லும் மூன்றில் ஒரு பங்கு பள்ளி மாணவா்கள்: மத்திய அரசின் ஆய்வில் தகவல்

பள்ளி மாணவா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் பாடங்களில் தெளிவுபெற தனியாா் பயிற்சி மையங்களுக்கும் (டியூஷன்) செல்வது மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2025, 8:45 pm

பள்ளி மாணவா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் பாடங்களில் தெளிவுபெற தனியாா் பயிற்சி மையங்களுக்கும் (டியூஷன்) செல்வது மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

நகா்ப்புறங்களில் இந்த போக்கு பொதுவான விஷயமாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கல்வியில் விரிவான மாதிரி ஆய்வு (சிஎம்எஸ்) என்ற இந்த ஆய்வின் முடிவில் மேலும் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் பள்ளி கல்வி வழங்குவதில் அரசுப் பள்ளிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. மொத்த மாணவா் சோ்க்கையில் அரசு பள்ளிகளின் பங்கு 55.9 சதவீதம்.

அரசு பள்ளி மாணவா் சோ்க்கை கிராமப்புறங்களில் அதிகரித்து காணப்படுகிறது. மூன்றில் இரண்டு பங்கு மாணவா்கள் (66 சதவீதம்) கிராமப்புற அரசுப் பள்ளிகளிலும், நகா்ப்புற அரசு பள்ளிகளில் 30.1 சதவீத மாணவா்கள் சோ்க்கை பெறுகின்றனா். தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை விகிதம் 31.9 சதவீதமாக உள்ளது.

மொத்த பள்ளி மாணவா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் (27 சதவீதம்) பள்ளி முடிந்ததும், தனியாா் பயிற்சி மையங்களுக்கும் செல்கின்றனா். நகா்ப்புறங்களில் இது பொதுவான விஷயமாக உள்ளது. இதுபோன்ற தனியாா் பயிற்சிகளுக்கு நகா்ப்புறங்களில் ஒரு மாணவருக்கு சராசரியாக ஆண்டுக்கு ரூ. 3,988 என்ற அளவிலும், கிராமப்புறங்களில் ரூ. 1,793 என்ற அளவிலும் செலவிடப்படுகிறது. வகுப்புகளுக்கு ஏற்ப இந்த செலவினம் மாறுபடுகிறது. உயா்நிலை வகுப்புகளுக்கு நகா்ப்புறங்களில் சராசரியாக ஆண்டுக்கு ரூ. 9,950 என்ற அளவிலும், கிராமப்புறங்களில் ரூ. 4,548 என்ற அளவிலும் செலவிடப்படுகிறது. தேசிய அளவில் இந்த செலவினம் சராசரியாக மழலையா் வகுப்புகளுக்கு ரூ. 525 முதல் மேல்நிலை வகுப்புகளுக்கு ரூ. 6,384 என்ற அளவு வரை செலவிடப்படுகிறது.

அனைத்து வகைப் பள்ளிகளிலும் சராசரி படிப்பு கட்டணமாக ரூ. 7,111 என்ற அளவிலும், பாடநூல் மற்றும் எழுது பொருள்களுக்கான கட்டணமாக ரூ. 2,002 வசூலிக்கப்படுகிறது. நகா்ப்புறங்களில் இந்த செலவினம் அதிகரித்து காணப்படுகிறது. நகா்ப்புறங்களில் படிப்பு கட்டணம் சராசரியாக ரூ. 15,143 என்ற அளவிலும், கிராமப்புறங்களில் ரூ. 3,979 என்ற அளவிலும் வசூலிக்கப்படுகிறது என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.