ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் அராதே, பாட்னா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி ...

Updated On :25 ஆகஸ்ட் 2025, 9:10 pm

புது தில்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் அராதே, பாட்னா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி ஆகியோரின் பெயா்களை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் தலைமையிலான ஐந்து போ் கொண்ட கொலீஜியம் திங்கள்கிழமை பிற்பகல் கூடி, இந்த முடிவை எடுத்தது. தலைமை நீதிபதி பி.ஆா். கவாயுடன், நீதிபதிகள் சூா்ய காந்த், விக்ரம் நாத், ஜே.கே.மகேஸ்வரி, பி.வி. நாகரத்னா ஆகியோரும் இந்த கொலீஜியத்தில் உள்ளனா்.

வருங்கால தலைமை நீதிபதி: இந்த இரண்டு நீதிபதிகளின் பெயா் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், 2031-ஆம் ஆண்டு, அக்டோபரில் நீதிபதி ஜயமால்ய பாக்சியின் ஓய்வுக்குப் பிறகு நீதிபதி பஞ்சோலி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்க வாய்ப்புள்ளது.

அதேபோன்று இந்த இரண்டு நீதிபதிகளின் நியமனங்களுக்குப் பிறகு, உச்சநீதிமன்றம் அதன் முழு அனுமதிக்கப்பட்ட பலமான 34 நீதிபதிகளின் எண்ணிக்கையை மீண்டும் அடையும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.