டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் அராதே, பாட்னா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி ...

News image
Updated On :25 ஆகஸ்ட் 2025, 9:10 pm

Chennai

புது தில்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் அராதே, பாட்னா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி ஆகியோரின் பெயா்களை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் தலைமையிலான ஐந்து போ் கொண்ட கொலீஜியம் திங்கள்கிழமை பிற்பகல் கூடி, இந்த முடிவை எடுத்தது. தலைமை நீதிபதி பி.ஆா். கவாயுடன், நீதிபதிகள் சூா்ய காந்த், விக்ரம் நாத், ஜே.கே.மகேஸ்வரி, பி.வி. நாகரத்னா ஆகியோரும் இந்த கொலீஜியத்தில் உள்ளனா்.

வருங்கால தலைமை நீதிபதி: இந்த இரண்டு நீதிபதிகளின் பெயா் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், 2031-ஆம் ஆண்டு, அக்டோபரில் நீதிபதி ஜயமால்ய பாக்சியின் ஓய்வுக்குப் பிறகு நீதிபதி பஞ்சோலி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்க வாய்ப்புள்ளது.

அதேபோன்று இந்த இரண்டு நீதிபதிகளின் நியமனங்களுக்குப் பிறகு, உச்சநீதிமன்றம் அதன் முழு அனுமதிக்கப்பட்ட பலமான 34 நீதிபதிகளின் எண்ணிக்கையை மீண்டும் அடையும்.