தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

ம.பி.யில் மின்னல் பாய்ந்து தம்பதி உள்பட மூவர் பலி!

வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட சம்பவம்..

News image

மின்னல் பாய்ந்து 3 பேர் பலி

Updated On :27 செப்டம்பர் 2024, 6:24 am

மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் மின்னல் பாய்ந்ததில் தம்பதி உள்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கில்சிபூர் தாலுகாவில் உள்ள மெஹ்ராஜ்புரா கிராமத்தில் ராஜு சென்(45) அவரது மனைவி கிருஷ்ணா பாய்(40) மகன் ராஜ் சென்(15), மகள் பிரியங்கா(17) ஆகியோர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மின்னல் பாய்ந்ததில் தம்பதி உள்பட மகன் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ராஜுவின் மகள் பிரியங்கா காயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளுக்காக மாவட்ட நிர்வாகம் தலா ரூ. 10,000 வழங்கியுள்ளதாக கில்சிப்பூர் நீதிபதி சுஷில் குமார் தெரிவித்தார்.

மேலும் இறந்தவர்களுக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.