மும்பை: மும்பை மாநகரில், நேற்று முதல் பெய்த கனமழை காரணமாக, அங்கு தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துகொண்டிருப்பதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையல், இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு நல்ல தகவலை வெளியிட்டிருக்கிறது.
அதாவது, மகாராஷ்டிர மாநிலத்தில் அக்டோபர் 5ஆம் தேதி முதல் பருவமழையானது மெல்ல விலகும் என்று அறிவித்துள்ளது.
புதன்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை, புணே உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. மும்பையில் கழிவுநீர் கால்வாயில் விழுந்த பெண் பலியானார்.
இந்த நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மும்பை மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி சுனில் காம்ளே, இந்த பருவமழைக் காலத்தில் மகாராஷ்டிரத்துக்கு 2900 மி.மீ. மழை பெய்துள்ளது. இது சராசரியைக் காட்டிலும் 600 மி.மீ. மழை அதிகமாகும்.
இன்னும் 5 - 6 நாள்களில், பருவமழை படிப்படியாகக் குறைந்து, அக்டோபர் 5ஆம் தேதி முற்றிலும் விடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது, ஒருவேளை, தாமதமானால், அக்டோபர் 10ம் தேதி பருவமழை விடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.
மும்பையில் நேற்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது, நேற்று ஒரே நாளில் 200 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இன்றும் மும்பைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

விவசாயிகளின் கனவு: வெற்றிலை ஆராய்ச்சி மையம்
தருமபுரி மாவட்டத்தில் 166 மி.மீ. மழை பொழிவு
தில்லியைக் காலையில் குளிா்வித்த லேசான மழை
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


