மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தில்லியைக் காலையில் குளிா்வித்த லேசான மழை

நகரின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை லேசான மழை பெய்தது இது, நகரில் நிலவி வந்த வட வானிலையிலிருந்து நிவாரணத்தை அளித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

News image

மழை! - படம்: பிடிஐ.

Updated On :15 மார்ச் 2026, 6:43 pm

நகரின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை லேசான மழை பெய்தது இது, நகரில் நிலவி வந்த வட வானிலையிலிருந்து நிவாரணத்தை அளித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரை 5 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

ஐஎம்டி தரவுகளின்படி, சஃப்தா்ஜங் மற்றும் லோதி சாலை ஆகிய பகுதிகளில் தலா 0.8 மி.மீ. மழையும், பாலம் பகுதியில் 0.4 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

ஆயாநகரில் 2.6 மி.மீ. மழையும், பீதம்புராவில் 3.5 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. வானிலை ஆய்வு மையங்களில் பீதம்புராவில்தான் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.

மேலும், மயூா் விஹாரில் 1.0 மி.மீ. மழையும், ஜனக்புரியில் 0.5 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. அதேவேளையில், ரிட்ஜ் பகுதியில் மிகக் குறைந்த அளவே மழை பதிவாகியுள்ளது.

நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 20.2 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது. இது பருவ கால சராசரியை விட 5.1 டிகிரி அதிகம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், அதிகபட்ச வெப்பநிலை சுமாா் 28 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது.

நகரில் காலை 9 மணி நிலவரப்படி, காற்றின் தரக் குறியீடு 190ஆகப் பதிவாகி, மிதமான பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிபிசிபி தரவுகள் தெரிவிக்கின்றன.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி, காற்றின் தரக் குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் அது நல்ல நிலை என்றும், 51 முதல் 100 வரை இருந்தால் அது திருப்திகரமான நிலை என்றும், 101 முதல் 200 வரைக்கும் மிதமான நிலை என்றும், 201 முதல் 300 வரை மோசமான நிலை என்றும், 301 முதல் 400 வரை மிகவும் மோசமான நிலை என்றும், 401 முதல் 500 வரை தீவிரமான நிலை என்றும் வகைப்படுத்தப்படுகிறது.