15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ராகுல்காந்தி மீது மூன்று வழக்குகள் பதிவு!

சீக்கிய சமூகத்தினரின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக ராகுலன் மீது மூன்று வழக்குகள் பதிவு.

News image

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி

Updated On :20 செப்டம்பர் 2024, 9:20 am

காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் மீது மூன்று எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

ராகுல்காந்தி சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அங்கு அவரின் உரையில், சீக்கிய சமூகம் குறித்து அவதூறு கருத்துகளைப் பேசியதாகவும், சீக்கிய சமூகத்தினரின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராகுல் காந்தி மீது சத்தீஸ்கரின் சில பகுதிகளிலிருந்து இதுவரை மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

தலைநகர் ராய்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல் நிலையத்திலும், மற்றொன்று பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பிலாஸ்பூர் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்திலும் இரண்டு வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று துர்க் மாவட்டத்தில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

பாஜக தலைவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தின் பிற மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களிலும் ஆளுங்கட்சித் தலைவர்களால் இதுபோன்ற புகார்கள் அளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.