ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

இணையப் பாதுகாப்பு இல்லாமல் நாட்டின் முன்னேற்றம் சாத்தியமற்றது: அமித் ஷா

இணையப் பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

News image

அமித் ஷா

Updated On :10 செப்டம்பர் 2024, 8:36 am

இணையப் பாதுகாப்பு இல்லாமல் நாட்டின் முன்னேற்றம் சாத்தியமற்றது: அமித் ஷா

இணையப் பாதுகாப்பை உறுதி செய்யாமல் நாட்டின் முன்னேற்றம் சாத்தியமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

இணையப் பாதுகாப்புக்கு எல்லையில்லை என்றும் அச்சுறுத்தலைச் சமளிக்க அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைவது அவசியமென்றும் அவர் கூறினார்.

இந்திய சைபர் குற்றம் ஒருங்கிணைப்பு மையத்தின் நிறுவனத் தின விழாவில் அமித் ஷா உரையாற்றினார். அவர் உரையில் கூறியதாவது,

இணையப் பாதுகாப்பு என்பது தேசியப் பாதுகாப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகும். சைபர் பாதுகாப்பு இல்லாமல் நாட்டின் முன்னேற்றம் சாத்தியமற்றது என்பதால் இணையப் பாதுகாப்பை நாம் உறுதி செய்ய வேண்டும்.

இந்தியாவில் இணையப் பாதுகாப்புகளைச் சமாளிக்க அடுத்த 5 ஆண்டுகளில் 5 ஆயிரம் சைபர் வீரர்களுக்குப் பயிற்சி அளித்து தயார்ப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

இணையப் பாதுகாப்பு குறித்து முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், உலகின் 46 சதவீத டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் நடைபெறுகின்றன.

நாட்டில் சைபர் குற்றம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணத் தேசிய அளவிலான ஒருங்கிணைப்பு மையத்தை நிறுவுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் கடந்த 2018இல் உருவாக்கப்பட்டது, இது சட்ட அமலாக்க முகமைகளின் திறன்களை மேம்படுத்துவதற்கும் சைபர் கிரைம் தொடர்பான பல்வேறு பங்குதாரர்களிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.