மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

நிலவில் அதிர்வுகள்! சந்திரயான் 3 வெளியிட்ட புதிய தகவல்!

நிலவில் அதிர்வுகள் ஏற்பட்டது குறித்து சந்திரயான் 3 வெளியிட்ட தரவுகள் பற்றி...

News image

சந்திரயான் 3 - கோப்புப்படம்

Updated On :9 செப்டம்பர் 2024, 7:58 am

நிலவில் ஏற்பட்ட அதிர்வுகளை பிரக்யான் ரோவர் பதிவு செய்துள்ளதாக சந்திரயான் 3 திட்டத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசாவின் அப்பல்லோ திட்டங்கள் தொடங்கியது முதல், நிலவின் தென் துருவத்தில் அதிர்வுகளை முதல்முறையாக பிரக்யான் ரோவர் கண்டுபிடித்துள்ளது. இதுவரை நிலவின் தென் துருவத்தில் ஏற்பட்ட அதிர்வுகள் குறித்த தரவுகள் எதுவும் வெளியானது இல்லை.

நிலவில் அதிர்வுகள்

நிலவின் தென் துருவத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட அதிர்வுகளுக்கான சமிக்ஞைகளை பிரக்யான் ரோவர் பதிவு செய்துள்ளது. இதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், 200 அதிர்வுகள் பிரக்யான் மற்றும் பிற கருவிகளால் ஏற்பட்டது என்றும், 50 அதிர்வுகள் எதற்கும் தொடர்பு இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், 50 அதிர்வுகள் நிலவில் ஏற்பட்ட நிலநடுக்கமாக இருக்கக் கூடும் என்று சந்தேகிப்பதாகவும், இதுகுறித்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஐஎல்எஸ்ஏ கருவி

சந்திரயான் 3 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. அதிலிருந்த பிரக்யான் ரோவர், நிலவின் வெப்பநிலை, மண்ணின் தன்மை உள்ளிட்ட ஆய்வுகளை 14 நாள்கள் மேற்கொண்டது.

விக்ரம் லேண்டரில் உள்ள இன்ஸ்ட்ரூமெண்ட் ஃபார் லூனார் சிஸ்மிக் ஆக்டிவிட்டி(ஐஎல்எஸ்ஏ) என்ற கருவி மூலம் தரையிறங்கிய இடத்தில் தெற்கில் 69.37 டிகிரி மற்றும் கிழக்கில் 32.32 டிகிரியில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

ஆகஸ்ட் 24, 2023 முதல் செப்டம்பர் 4, 2023 வரையிலான காலகட்டத்தில் 190 மணிநேரம் இந்த கருவி செயல்பட்டுள்ளது. இதன் தரவுகளை இஸ்ரோ குழுவினர் பகுப்பாய்வு செய்து தற்போது வெளியிட்டுள்ளனர்.

விஞ்ஞானிகள் ஆய்வு

பிரக்யான் ரோவரில் இருந்த ஐஎல்எஸ்ஏ கருவி மூலம் கிடைத்த தகவல்களை பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் ஆய்வகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், மொத்தமுள்ள 250 அதிர்வுகளுக்கான சமிக்ஞைகளில் ரோவருக்கும் கருவிகளுக்கும் தொடர்பில்லாத 50 அதிர்வுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து விரிவான ஆய்வுக்கு பிறகே முழுத் தகவல் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

அதிகபட்மாக ஒரு அதிர்வு 14 நிமிடங்கள் நீடித்ததாகவும், ஓரிரு வினாடிகள் வரை நீடித்த அதிர்வுகள் கணக்கில் கொள்ளவில்லை எனவும் விஞ்ஞானிகள் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.