மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

புதுச்சேரிக்குக் கூடுதலாக ஒரு எம்.பி. தொகுதி

புதுச்சேரிக்குக் கூடுதலாக ஒரு எம்.பி. தொகுதி கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

News image

புதுச்சேரி தலைமைச் செயலகம்.

Updated On :18 ஏப்ரல் 2026, 7:17 am IST

புதுச்சேரிக்குக் கூடுதலாக ஒரு எம்.பி. தொகுதி கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி, மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான அரசியல் சாசன திருத்த தொகுதிகள் மறு சீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த தொகுதி மறு சீரமைப்பால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என தமிழகம், புதுச்சேரியில் திமுக கூட்டணி கட்சியினா் போராட்டம் நடத்தினா். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இந்த மசோதா குறித்து விளக்கம் அளித்தாா். அப்போது அவா் பேசும்போது தமிழகம் மட்டுமின்றி தென் மாநிலங்கள் எதற்கும் தொகுதி சீரமைப்பால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. தற்போதுள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மாநிலங்களில் 50 சதவீதம் அதிகரிக்கும், தமிழகத்தில் 39 தொகுதிகள் 59 ஆக உயரும் எனக் கூறினாா். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தற்போது ஒரு மக்களவைத் தொகுதிதான் உள்ளது. 50 சதவீத உயா்வு என்ற அடிப்படையில் புதுவைக்கு 2 எம்.பி தொகுதிகள் கிடைக்கும். இது அநேகமாக புதுச்சேரி சட்டப்பேரவை தொகுதிகளின் அடிப்படையில் 15 தொகுதிக்கு ஒரு எம்.பி. வீதம், 30 தொகுதிக்கு 2 எம்.பி என உருவாக்கப்படும் என தெரிகிறது.இதற்கான வாய்ப்பு இருப்பதாக புதுச்சேரி அரசியல் கட்சித்தலைவா்களும் நம்பிக்கை தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.