எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மும்பையில் செப்.8ல் கனமழை பெய்யும்: மஞ்சள் எச்சரிக்கை!

மும்பையில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

News image

மஞ்சள் நிற எச்சரிக்கை

Updated On :6 செப்டம்பர் 2024, 10:45 am

மும்பையில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி திருவிழா கடைப்பிடிக்கப்படுகிறது. குறிப்பாக மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், மும்பையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதற்கான மஞ்சள் எச்சரிகையும் விடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையான நாளை மிதமான மழையும் பெய்யக்கூடும் என ஐஎம்டி தெரிவித்துள்ளது.

தாணே மாவட்டத்துக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராய்காட்டில் சனிக்கிழமை முதல் திங்கள் வரை கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் வெளியிட்டுள்ளது. இதற்கிடையில் வியாழக்கிழமை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.

ஜூன் மாதத்தில் பருவமழை தொடங்கியதிலிருந்து வெள்ளிக்கிழமை காலை வரை 2,500 மிமீ மழை பதிவாகியுள்ளதாகவும், செப்டம்பர் மாதத்தில் சராசரிக்கும் அதிகமான மழைப் பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.