ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ராகுல், கார்கேவுடன் முதல்வர் ஹேமந்த் சோரன் சந்திப்பு!

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

News image

ராகுல் கார்கேவுடன் ஹேமந்த் சோரன்

Updated On :3 செப்டம்பர் 2024, 8:05 am

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதித்தார்.

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாயி சோரன் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியிலிருந்து ராஜிநாமா செய்து பாஜகவில் இணைந்த சில நாள்களுக்குப் பிறகு, கட்சியின் தற்போதைய செயல்பாடு, அதிருப்தியைத் தொடர்ந்த இந்த சந்திப்பு இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவரின் இல்லத்தில் கார்கே, ராகுல் காந்தியைச் சோரன் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், சோரனின் மனைவி கல்பனா சோரன் ஆகியோரும் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என சோரன் கோரியிருந்தாலும், இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பணமோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறையினரால் கைது செய்ததைத் தொடர்ந்து, அவர் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதைத்தொடர்ந்து சம்பாயி சோரன் முதல்வராக நியமிக்கப்பட்டார்.

ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து, ஜூலை 4ல் ஹேமந்த் சோரன் மீண்டும் முயல்வாகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.