தலைநகரில் அதிகரித்துவரும் காற்று மற்றும் நீர் மாசுபாட்டிற்கு பாஜகவின் மோசமான அரசியலே காரணம் என தில்லி முதல்வர் அதிஷி குற்றம் சாட்டினார்.
வஜிராபாத் தடுப்பணையைப் பார்வையிட்ட பிறகு அவர் கூறியது,
ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலைக் கழிவுகளால் யமுனையில் அமோனியா அளவு அதிகரித்துள்ளதாகவும், இதன் விளைவாக நீர் உற்பத்தி 40 சதவீதம் குறைந்துள்ளது.
இதையும் படிக்க: 14 மாவட்டங்களில் இன்று கனமழை!
கடந்த நில நாள்களாக தில்லியில் மாசு மோசமாகி வருகிறது. குறிப்பாக தீபாவளியின்போது யமுனை ஆற்றில் வெண்மை நுரை உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். யமுனையில் சுத்திகரிக்கப்படாத தண்ணீரை அனுப்பும் ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான அரசுகளின் திட்டமிட்ட செயல் என்றார்.
இதன் விளைவாக அமோனியா அளவு அதிகரித்து தண்ணீரைக் குடிக்க முடியாத அளவிற்கு ஆக்குகிறது. ஹரியாணாவிலிருந்து மாசடைந்த நீர் சுத்திகரிப்பு நிலையங்களைச் சென்றடைகிறது. இதனால் குடியிருப்பாளர்களுக்கு சுத்தமான நீர் விநியோகத்தைப் பாதிக்கிறது. விஜிராபாத், சோனியா விஹார் மற்றும் பாகீரதி ஆகிய மூன்று சுத்திகரிப்பு நிலையங்களில் அமோனியா அளவு அதிகரித்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்னைகளுக்கு மூல காரணம் பாஜகவின் மோசமான அரசியல் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தில்லி மக்களுக்கு பாஜக தீங்கு விளைவிக்கும் அதேநேரத்தில் அவர்களைப் பாதுகாக்கத் தனது அரசு பாடுபடுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
2021 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பஞ்சாபில் மரக்கன்றுகள் எரிக்கப்படும் சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும், ஹரியாணாவில் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தில்லி: ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது!

தில்லியில் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லியில் ரூ.400 தொடர்பான தகராறில் இளைஞர் கொலை: 3 சிறுவர்கள் கைது
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி தில்லியில் கைது!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


