தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஜார்க்கண்ட்: 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்!

இரண்டாம் கட்ட வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது.

News image

2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்

Updated On :22 அக்டோபர் 2024, 6:20 am

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்புமனுத் தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த நிலையில் நவம்பர் 23ஆம் தேதி இரண்டாம் கட்டமாக நிகழும் தேர்தலுக்கு 38 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. தொடர்ந்து அக்.29 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்களை காலை 11 மணி முதல் மாலை 3 மணிக்குள் ஏற்றுக்கொள்ளப்படும்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்பாளர்கள் நவம்பர் 1ஆம் தேதிக்குள் தங்கள் பெயர்களைத் திரும்பப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக ராஜ்மஹால், பாகூர், நாலா, ஜம்தாரா, ஜர்முண்டி, மதுபூர், சரத், போரேயாஹத், கோட்டா, மகாகாமா, ராம்கர், மண்டு, தன்வார், பகோதர், காண்டே, கிரிதிஹ், டும்ரி, கோமியா, பெர்மோ, பொகாரோ, சிந்த்ரி, நிர்சா, தன்பாத், ஜாரியா, துண்டி, பாக்மாரா மற்றும் சில்லி ஆகிய தொகுதிகளுக்கு பொதுப் பிரிவின் கீழ் தேர்தல் நடைபெறுகிறது.

எஸ்டி தொகுதிகளான போரியோ, பர்ஹைத், லிட்டிபாரா, மகேஷ்பூர், சிகாரிபாரா, தும்கா, ஜமா மற்றும் கிஜ்ரி, எஸ்சி தொகுதிகளில் தியோகர், ஜமுவா மற்றும் சந்தன்கியாரி ஆகியவை அடங்கும்.

11.84 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள் ஆவார். 1.13 லட்சம் மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் உள்பட சுமார் 2.60 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 2019 சட்டமன்றத் தேர்தலில் 2.23 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.