தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஹரியாணா: அக்.25ல் தற்காலிக அவைத் தலைவராகப் பதவியேற்கிறார் ரகுவீர் சிங்!

15வது ஹரியாணா சட்டப் பேரவையின் தற்காலிக அவைத்தலைவராக ரகுவீர் சிங் காடியன் பதவியேற்கவுள்ளார்.

News image

ரகுவீர் சிங் காடியன்

Updated On :21 அக்டோபர் 2024, 10:49 am

சண்டீகர்: ஹரியாணா சட்டப்பேரவைக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அக்டோபர் 25-ம் தேதி பதவியேற்றுக்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

15வது ஹரியாணா சட்டப் பேரவையின் தற்காலிக அவைத்தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவரும் கட்சியின் எம்எல்ஏவுமான ரகுவீர் சிங் காடியன்(80) பதவியேற்கவுள்ளார்.

அதற்கு முன்னதாக ரகுவீர் காடியனுக்கு ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா தற்காலிக அவைத்தலைவராகப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார். இந்த தகவலை விதான் சபா செயலகத்திற்கு, மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக அக்.17ல் ஹரியாணாவின் முதல்வராக நயாப் சிங் சைனி இரண்டாவது முறையாக ஹரியாணாவின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவில் முதல்வர் உள்பட 14 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியாணா பேரவையில் எம்எல்ஏக்கள் பதவியேற்ற பிறகு அவைத்தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் நடத்தப்படுகிறது.

ஹரியாணா மாநிலத்தில் அக்.5-ம் தேதி நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றுத் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. காங்கிரஸ் 37 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சியாக உள்ளது.

ஹரியாணாவின் மூத்த சட்டப்பேரவை உறுப்பினரான காடியன், 2005 முதல் 2009 வரை பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது ஹரியாணா சட்டப்பேரவையின் சபாநாயகராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.